உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. மொழி என்றால் என்ன?

முன்னுரை

ஒரு வகுப்பார் அல்லது நாட்டார் தம் கருத்தைப் பிறர்க்குப் புலப்படுத்தற்குக் கருவியாகக் கொள்ளும் ஒலித்தொகுதியே மொழியாம். அவ் வொலி சொல்லுஞ் சொற்றொடருமாயிருக்கும். சொல்லும் ஒரெழுத்துச் சொல் ஈரெழுத்தச் சொல் முதலியவாகப் பலவகைத்து,

ஓர் ஒலி வேறு; அதனால் உணர்த்தப்படும் பொருள் வேறு. ஒலிக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு வரிவடி வெழுத்திற்கும் ஒலிவடி வெழுத்திற்கும் உள்ளதே. காற்று இயங்குவதினாலும் இரு அல்லது பல பொருள்கள் ஒன்றோடொன்று உராய்வதனாலும் ஓசை பிறக்கும். அவ் வோசைக்கு இயல்பாய்ப் பொருளில்லை. அவ் வோசையைப் பொருளுணர்த்தும் அடையாளமாகக் கொண்டதே மொழியாம். காற்றியக்கம் வெள்ளிடையியங்குவதும் உயிரி (பிராணி)களின் வாய்வழி இயங்குவதும் என இருவகைத்து. இவற்றுள், பின்னதன் பயனாய ஒலிகளே பெரும்பாலும் மொழிக் கருவியாம். ஒலிக்கு இயல்பாய்ப் பொருளுணர்த்தும் தன்மை யிருப்பின், உலகமெங்கும் என்றும் ஒரு மொழியாயும் அதுவும் கல்லாமலே அறியப்படுவதாயு மிருக்கும். அங்ஙனம் இன்மையறிக. ம்

மொழிநூலின் திறமறியாத சிலர், ஒசை நிலைப்பானது ஆகவே ஒசைவடிவான மொழிகளும் நிலைப்பானவை என்று கூறுவர். இது, இரும்பு நிலைப்பானது; ஆகவே, இரும்பு வடிவான இயந்திரங்களும் நிலைப்பானவை; புதிதாயுண்டாயவையல்ல என்று கூறுவது போன்றதே.

வெவ்வேறு

ஒவ்வொரு நாட்டாரும் பெரும்பாலும் மொழியைப் பேசிவருகின்றனர். ஒரு நாட்டார் ஒரு நாட்டார் மற்றொரு நாட்டாரின் மொழியைக் கற்றாலொழியப் பேச முடியாது. ஒரு