உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

7

தொகுதற்கும், அதற்குமுன் இயற்றமிழ் தோன்றற்கும், அதற்குமுன் லக்கணமும் அதற்குமுன் இலக்கியமும் அதற்குமுன் எழுத்தும் அதற்குமுன் மொழியும் தோன்றற்கும் கணக்கிட முடியாத காலஞ்சென்றிருத்தல் வேண்டும். பொருளதிகாரத்தில் கூறப்படும் ஐந்திணை நிலையும் 'தழைகொண்டு சேறல்', 'இயற்கைப் புணர்ச்சி' முதலிய பகுதிகளும், தமிழர் துவக்கந்தொட்டுத் தென்னாட்டிற்கே உரியர் என்பதை உணர்த்தும். தமிழ் இயல்பாய்த் தோன்றிய மொழியாதலானும், தெற்கிருந்து வடக்கு நோக்கியே திரிந்து செல்லுதலானும், மிகத் தொன்மை வாய்ந்ததாதலானும், அது தோன்றியது குமரிநாடே என்று துணியப்படும்.

பழந்தமிழர் தம் முன்னோரைத் தென்புலத்தார் என்றமையாலும், தெற்கே அமிழ்ந்துபோன குமரிநாடே தமிழர் தொல்லகம் என்பது ணரப்படும். எதிர்த் திசைகளைக் குறிக்கும் போது கிழமேல் தென்வடல் என்று கூறுவதே மரபு; மேல்கிழக்கு வடதெற்கு என்று கூறுவது மரபன்று. நாகரிக மக்கள் கீழிருந்தே மேற்செல்ல வேண்டியிருப்பதாலும், கதிரவன் கிழக்கே தோன்றி மேற்கே மறைவதாலும் கிழக்கு முற்கூறப்பட்டது. தமிழர் தெற்கேயிருந்தே வடக்கு வந்தவராதலின் தெற்கு முற்கூறப்பட்டது என்க.

5. தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தது

பண்டைக் காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப் பெயர்களும் பெரும்பாலும் 'அம்' ஈறு பெற்றே வழங்கின. எ-டு: சிங்களம், கடாரம், ஆரியம். தமிழும் 'தமிழம்' என வழங்கிக் குலத்தையும் நாட்டையும் மொழியையுங் குறித்தது. தமிழக் கூத்து தமிழ வண்ணான் என்னும் புணர்மொழிகளில், தமிழ் என்னுஞ்சொல் அகரச்சாரியை பெற்றுப் புணர்ந்ததென்று கொள்வதைவிட, தமிழம் என்னுஞ் சொல்லே நிலைமொழியாக நின்று ஈறுகெட்டுப் புணர்ந்ததென்று கொள்வது சாலச் சிறந்தது. தமிழம் என்பது குலமும் நாடும் மொழியும் ஆகிய மூன்றையும் குறிக்குஞ் சொல்லாதலின், தெளிவின் பொருட்டு நாட்டைக் குறிக்கும்போது தமிழகம் என வழங்கினர்.

66

வையக வரைப்பில் தமிழகங் கேட்ப" (புறம். 168:18) தமிழகம் என்னும் பெயரையே பண்டைக் கிரேக்க உரோம