உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

தமிழர் மதம்

சம்பந்தர் வேதத்தையும் வேதியரையும் வேள்வியையும் பலவிடத்தும் பாராட்டிப் போற்றியிருப்பதை நோக்குமிடத்து, அவர் சிவ நெறியை மட்டுமன்றி வேதநெறியையுங் காக்கவே, சமண மதத்தைப் பாண்டிநாட்டில் தொலைத்தார் என்று கருத நேர் கின்றது.

மரைக்காட்டில், திருநாவுக்கரசர் பாடிய பதிக இறுதியில் கதவு திறந்ததும், சம்பந்தர் பாடிய பதிகத் தொடக்கத்திலேயே கதவு சாத்திக் கொண்டதும், திருவீழி மிழலையிற் சம்பந்தர் படிக்காசு வட்டங் கொடுத்தும் நாவுக்கரசர் படிக்காசு வட்டங் கொடாதும் மாற்றப்பட்டதன் விளைவான பிராமணச் சூழ்ச்சி போலும்! மறைக் காடு என்னும் பெயரே, அவ் வூர்ப் பிராமணப் பூசகரின் புரட்டை விளக்கப் போதிய சான்றாம்.

முத்தொழிற் சிவனை அழிப்புத் திருமேனியாகவும், முத் தொழின் மாலைக் காப்புத் திருமேனியாகவும், ஆரியர் வகுத்தத னாலும் மாலியம் தமிழகத்தில் வரவர வளர்ந்து வந்திருக்கின்றது என்னலாம். இராமாயண பாரதக் கதைகளும் இதற்குப் பெரிதும் துணை செய்திருக்கின்றன.

மாலியரான தொல்காப்பியர், சேயோனும் குறிஞ்சியும் முத லாகச் சொல்ல வேண்டிய திணைகளை, கி.மு. 7ஆம் நூற்றாண்டி லேயே மாயோனும் முல்லையும் முதலாகச் சொல்லிவிட்டார்.

தமிழச் சிறுபிள்ளைகட் கெல்லாம், கடைக்கழகக் காலத்திற்கு முன்பிருந்தே, மதவேறுபாடின்றி ஐம்படைத் தாலி காப்பணியாக அணியப்பட்டு வந்திருக்கின்றது.

நம்மாழ்வார் காலத்திற்குப் பின் நெடுங்கணக்கு அரிச்சுவடி என்று பெயர் பெற்றுவிட்டது. இடைக்காலத்தில், 'அரி ஓம் நம' என்று தொடங்கி எழுத்தறிவிக்கப்பட்டதாகத் தெரிகின்றது.