உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

திருக்குறள்

தமிழ் மரபுரை





மேலையர் ஊதை முதலிய முக்கூறுகளையும் அரத்தம் (blood), கோழை (phlegm), பித்தம் (choler), கரும்பித்தம் (melancholy) என நால்வகை நீரங்களாகப் (humours) பகுப்பர்.

942.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி யுணின்.

(இ-ரை.) அருந்தியது அற்றது போற்றி உணின் ஒருவன் தான் முன்னுண்டது செரித்ததைக் குறிகளால் தெளிவாக அறிந்து அதன்பின் உண்பானாயின்; யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம் - அவனுடம்பிற்கு மருந்தென்றே ஒன்றுந் தேவையில்லை.

பெரும்பாலும் நோ-களெல்லாம் செரியாவுணவாலும் பொருந்தா வுணவாலும் மிகையுணவாலுமே நேர்வதால், இது முதல் ஆறு குறள்களில் ஆசிரியர் உணவுநெறிபற்றியே கூறுகின்றார். செரிமானத்தை யறியுங் குறிகள் வயிற்றிற் கனமின்மை, ஏப்பத்தின் செம்மை, இருவகைக் கரணங்களும் தொழில் செ-யத் தகுதியாயிருத்தல். பசியுண்டாதல், உண்டு ஐந்து மணி நேரத்திற்கு மேலாயிருத்தல் என்பன. 'யாக்கை' ஆகுபெயர். எழுவகைத் தாதுக்களால் யாக்கப்பட்டது யாக்கை. யாத்தல் கட்டுதல், 'உணின்' என்பது அதன் அருமையையும் நிலைப்பாட்டையும் உணர்த்திற்று. இக் குறளால் உண்டது செரித்தபின் உண்டால் நோ- வராதென்பது கூறப்பட்டது.

தமிழகத்து உணவு தொன்றுதொட்டு மருத்துவ முறையிற் சமைக்கப் பட்டு வருகின்றது. பச்சரிசி சூடுண்டாக்குமாதலால் வெப்பநாட்டிற் கேற்கா தென்று புழுங்கலரிசி யாக்கப்படுகின்றது. அதைச் சரிதண்ணீர் வைத்துச் சமைத்தல் வேண்டும். சுவைமிகுத்தற்குத் தீட்டும்போது நீக்குந் தவிட்டைத் தனியாகக் கொழுக்கட்டை பிடித்துத் தின்பது வழக்கம். வாழைக்கா வளிமிகுப்பதென்று பிஞ்சுநிலையில் சமைக்கப்படும். சீனியவரையென்னுங் கொத்தவரை பித்தமிகுப்பதென்று முதலில் அவித்து இறுக்கப்படும். காற லுண்டாக்குங் கா-கட்குப் புளி சேர்க்கப்படும். காயச்சரக்காகக் கூட்டுவன வற்றுள் மஞ்சள் நெஞ்சுச் சளியை முறிக்கும்; கொத்துமல்லி பித்தத்தையடிக்கும்; சீரகம் வயிற்றுச் சூட்டைத் தணிக்கும்; மிளகு தொண்டைக் கட்டைத் தொலைக்கும்; பூண்டு வளியகற்றி வயிற்றளைச்சலை நிறுத்திப் பசிமிகுக் கும். வெங்காயம் குளிர்ச்சியுண்டாக்கிக் குருதியைத் தூ-மைப்படுத்தும்; பெருங்காயம் வளியை வெளியேற்றும்; இஞ்சி பித்தத்தை யொடுக்கிக் கா-ச்சலைக் கண்டிக்கும்; தேங்கா- நீர்க்கோவை யென்னுந் தடுமத்தை