உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

131

கரணியமாயிருத்தலால், கள்வருக்கு ஒற்றர் வேலையும் கொள்ளைக்காரருக்குப் படைத்துறை வேலையும் கொடுப் பின், ஓரளவு நிலைமை திருந்தலாம்.

கள்ளத்

இனி, கள்ளக் காசுத்தாளடிப்பாரையும் தனமாகத் துமுக்கி (gun), சுழலி (revolver) முதலியன செய்வாரையும், பொறியாக்கத் தொழிலிற் பயிற்றின், சிறந்த பொறிவினை ஞராகவோ புதுப் புதுப் புனைவாளராகவோ தலையெடுக்கலாம்.

மண்சுவருங்

16. வீடமைப்பு

கூரையுங் கொண்ட குடிசைகளு ம் வீடுகளும், ஆண்டுதோறும் அடைமழையிற் சேதமாவதும், புயன்மழை தோறும் இடிந்துவிழுவதும், அடிக்கடி தீக்கோட் பட்டு எரிந்து போவது மாயிருத்தலால்,ஒரேயடியாகக் கற்சுவரும் மச்சுமாகக் கட்டிவிடின், ஆண்டுதோறும் நேரும் அழிவும் நீங்கும், செலவும் இராது. கட்டுதற் செலவிற்கு அரசு கடன் கொடுத்துதவலாம்.

ளை

செங்கற் சுடுவதற்குப் பலவிடத்தும் மண்ணெடுத்து நிலங் குன்றியிருப்பதால், இனிமேற் கட்டட வேலைக்கெல்லாம், மரஞ் செடி கொடிகள் இல்லாதனவும் விளைநிலமல்லாதனவு மான பாறைகளிலும் பொற்றைகளி லுமிருந்து கல்வெட்டி யெடுத்தே பயன்படுத்தல் வேண்டும். நாடுமுழுதும் பாறையும் பொற்றையும் மிகுந்திருப்பதால், கல்லிற்குப் பஞ்சமில்லை. கற்கட்டடம் உ டம் உறுதியாயிருக்கும். பொற்றைகள் நிலமட்டமாகி விடின் வீடமைப்பிற்கும் சாலையமைப்பிற்கும் இடமுங் கிடைக்கும்.

உழவர் வீடுகளும் ஆயர் வீடுகளும் தாழிற் சாலைகளும் தவிர ஏனையோர் வீடுகளெல்லாம் மேனோக்கி யன்றிப் பக்கவாட்டில் விரிவடைதல் கூடாது. அமெரிக்கா விற் போல் 50 அல்லது 60 நிலைக் கட்டடங்கள் எழாவிடினும், 5 அல்லது 6 நிலைக்கட்டடங்கள் ஆயிரக்கணக்காக எழலாம். மண்டபங் களும் கோவில்களும் கல்லாலேயே அமைதல் வேண்டும்.

17. நகரமைப்பு

நகரமைப்பு, முற்கூறியவாறு பாலைநிலத்திலும் பாறை நிலத்திலும் அமைதல் வேண்டும். மக்கட்டொகை மட்டிற்கு மிஞ்சி இரு மடங்கும் மும்மடங்கும் பெருகி, விளைநிலம்