உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வள்ளுவர் கூட்டுடைமை

39

யான அளவிறந்த வருமானவரி சுமத்தி அவர் உள்ளந் தளரவும் நெஞ்சம் புண்படவும் செய்தது. அதனால் அவர் தம்மனநோ வின் கடுமையை, தம் புதுப் புனைவுகளையுங் கண்டுபிடிப்பு களையும் வெளிப்படையாகச் சுட்டெரித்துக் காட்டினார்.

இக்காலத்திற் பொன்னும் எண்ணெயும் போன்ற கனியப் பொருள்கள் இல்லா நாடுகளெல்லாம், புதுப்புனைவுகளாலும் கண்டுபிடிப்புகளாலுமே தழைத்தோங்கமுடியும். ஆதலால், அவ்வாற்றலுள்ளாரை வரியும் செல்வ வரம்பும் இடாது அரசு ஊக்குதல் வேண்டும். புதுப்புனைவுகளால் மக்கள் வாழ்க்கை ஏந்தும் (வசதியும்) இன்பமும் பெறுவதால், புதுப்புனைவாளரை யெல்லாம் குலமத கட்சி வேறுபாடின்றி நாட்டுவளம் பெருக் கியவராகவும் உலகப் பொதுநலத் தொண்டராகவும் போற்றுதல் வேண்டும்.

இனி,தன்னலமின்றி மன்னலமே பேணித் தம் பொருளை யெல்லாம் வரையாதீயும் வள்ளல்கட்கும் செல்வவரம்பிருத்தல்

கூடாது.

66

'ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்

99

பேரறி வாளன் திரு.

'பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

""

நயனுடை யான்கண் படின்.

பெருந்தகை யான்கண் படின்.

"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

""

(குறள்.215)

(குறள்.216)

(குறள்.217)

வள்ளன்மார் நாட்டு வறுமையைப் போக்குவதால், அரசின் கடமையை ஆற்றுபவரும் அதன் சுமையைக் குறைப்ப வரும் ஆவர்.

ஈகையாளர்க்கு ஈதலே இன்பம். ஈயாமை அவர்க்கு இறப்பினுங் கொடிய துன்பம்.

"ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்.

""

"சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை.

99

"முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்

யாமும் பாரியும் உளமே

குறள் 228)

(குறள்.230)

22

குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே.

(புறம்.110)