உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 34.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. வாழ்க்கை நோக்கம்

முன்னுரை

இவ் வுலகிற் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு சிறிதேனும் இன்பமாய் வாழ விரும்புவதாலும், அவ் இன்பத்திற்கு இன்றியமையாது வேண்டுவது பொருளாதலாலும், அப் பொருள் பெற்றார் செய்யவேண்டிய கடமை அறமாதலாலும் இம்மையில் மக்கள் வாழ்க்கைக் குறிக்கோள் இன்பமும் பொருளும் அறமும் என மூன்றாகக் குறித்தனர் முன்னோர். இம் மூன்றனுள்ளும், அறம் சிறந்ததாயும் ஏனை யிரண்டிற்கும் பொதுவாயு மிருத்தலான், அறவழியில் ஈட்டிய பொருளைக்கொண்டு அறவழியில் இன்பந் துய்க்கவேண்டு மென்னும் கருத்தால், அறத்தை முன்வைத்து முப்பொருளையும் அறம் பொருள் இன்பம் என மாற்றியமைத்தனர் பின்னோர்.

ஒருவர்க்கு ஊண், இசை, காட்சி முதலிய பிறவற்றாலும் இன்பமுண்டாகு மேனும், பேரளவுபற்றியும் ஐம்புலனுந் தழுவல் பற்றியும், பெண்ணின்பமே இம்மையிற் பேரின்பமாகக் கொள்ளப்பெற்றது.

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின்".

66

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள

99

எனத் திருவள்ளுவனாருங் கூறியிருத்தல் காண்க.

(54)

(111)

மக்களிடை மதத்துறை வளர்ச்சியடைந்து வீடுபேற்று நம்பிக்கை ஏற்பட்டபின், மாந்தன் குறிக்கோள் அல்லது பேறு அறம்பொருள் இன்பம் வீடு என நான்காக வகுக்கப் பெற்றது. இந் நான்கும் நாற்பொருள் அல்லது நான்மாண் பொருள் எனப்படும்.

இம்மையின்பமாகிய

பெண்ணின்பமும்

மறுமையின்பமாகிய

வீட்டின்பமும், ஒப்பு நோக்க வகையால், முறையே சிற்றின்பம் பேரின்பம் எனப்படினும், சிற்றின்பமே இயற்கைக் கேற்றதும், உடனே நுகர்தற் குரியதும், எளிதாய்க் கிட்டுவதும், கண்கூடாகக் காணப் பெறுவது மாயிருத்தலின், அதுவே பெரும்பாலரால் விரும்பப்படுவதாம்.

"ஈதல்அறம் தீவினைவிட் டீட்டல்பொருள் எஞ்ஞான்றும்

காதல் மனையாளும் காதலனும்

தீதின்றிப்