உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காப்பு

கலிவிருத்தம்

பூவினிற் போகமே புந்தி பொருந்திடும் ஆவன மாந்தருக் கன்று வரைந்தன பாவினை யின்றியும் பண்டித ருள்ளரால் தேவனைப் பாடவுந் திருவருள் வேண்டுமே.

கடவுட்பரவல்

பிதா

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் மன்னுயி' ரென்றுங் கெட்டு மாண்டுபோ காம லென்றும் மன்னுயிரடைய வேக மகனைமுன் னளித்துப் பாரில் இன்னதா யன்பு கூர்ந்தா ரெனிற்றிருப் பரம தந்தை என்னதென் றுரைப்பேன் ஈசன் எனக்கருள் செய்த வாறே. 1. மனிதாத்துமா, 2. நித்தியசீவன்.

குமாரன்

பாவியை மீட்க வின்பப் பரத்தைவிட் டிறங்கிப் பாவம் பூவிலோ ரேழை யாகிப் பொறையொடு திரிந்து சுற்றி நாவினா லுரைக்க வொண்ணா நடுக்குறும் பாடு பட்டே ஆவியு மளித்த ஏசு வடியினை முடிமேற் கொள்வாம். பரிசுத்தாவி

எண்ணரு மாதி நீர்மே லியங்கியே ஏசு தேவ புண்ணியன் தலைமே லன்று புறவ'மா யிறங்கிச் சீடர் கண்ணிய பெந்தேக் கோத்திற் கனற்பெருங் காற்று வீசி மண்ணியல் மொழிகள் பேச மருவுதூ யாவி போற்றி.

1. புறா.