செந்தமிழ்க் காஞ்சி
8. தமிழ்நூல்கள்
நொண்டிச் சிந்து
வெண்பா புகழேந்தி - மிகவும்
வியந்திடும் பரணிக்குச் சயங்கொண்டான்
விருத்தம் உயர்கம்பன் - விரித்த
விழுமிய கவிப்பொருட் கொழுமையென்ன
கடுத்தே கவிபாடும் - அந்தக்
காளமேக வசையுஞ்சி லேடையழகே.
அருண கிரிநாதர் – அடைந்த
அருட்பொலி வாகும்அவர் திருப்புகழே.
தொல்காப்பிய வழிநூல்-இன்று
தொன்மைபெற்ற நூல்களிலே முன்மைபெற்றதே.
தெய்வத் திருக்குறளே - எல்லாத் தேயத்தாரும் போற்றும் நடுத்திற நீதி.
திருவா சகத்திற்கே - உருகார் ஒருவா சகத்திற்குமே உருகாரே.
—
ஆல்வேல் பற்குறுதி சால
அழகிய நாலிரண்டு மொழிக்குறுதி. கதியே கதியென்றார் - முன்னைக் கதியே கம்பருடன் மெய்த்திருவள்ளுவர்
சிலப்பதி காரமென்னும் - காவியம்
செப்பிய ஒவ்வொரு சொல்லும் கொப்பின் தெளிதேன்.
சிந்தா மணிச்செய்யுள் - புலவர்
சிந்தையுள்ள குறையெல்லாம் தந்து நிறைக்கும்.
மணிமே கலைநூலே - தமிழின்
மாகலை மீதேயணியும் மேகலையாகும்.
தேனார் திருக்கோவை - பலர்தம்
திறத்தினுக் கேற்றபடி தெரியக் காண்பார்
தேவாரத் திவ்யப் - பதிகம்
செழிய பக்திச் சுவையை வழியவூட்டும்
கற்றோர் புகழ்ந்தேத்தும் - அகநூற்
கலித்தொகை தீர்க்கும்மணக் கலித்தொகையே.
11