உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செந்தமிழ்க் காஞ்சி

8. தமிழ்நூல்கள்

நொண்டிச் சிந்து

வெண்பா புகழேந்தி - மிகவும்

வியந்திடும் பரணிக்குச் சயங்கொண்டான்

விருத்தம் உயர்கம்பன் - விரித்த

விழுமிய கவிப்பொருட் கொழுமையென்ன

கடுத்தே கவிபாடும் - அந்தக்

காளமேக வசையுஞ்சி லேடையழகே.

அருண கிரிநாதர் – அடைந்த

அருட்பொலி வாகும்அவர் திருப்புகழே.

தொல்காப்பிய வழிநூல்-இன்று

தொன்மைபெற்ற நூல்களிலே முன்மைபெற்றதே.

தெய்வத் திருக்குறளே - எல்லாத் தேயத்தாரும் போற்றும் நடுத்திற நீதி.

திருவா சகத்திற்கே - உருகார் ஒருவா சகத்திற்குமே உருகாரே.

ஆல்வேல் பற்குறுதி சால

அழகிய நாலிரண்டு மொழிக்குறுதி. கதியே கதியென்றார் - முன்னைக் கதியே கம்பருடன் மெய்த்திருவள்ளுவர்

சிலப்பதி காரமென்னும் - காவியம்

செப்பிய ஒவ்வொரு சொல்லும் கொப்பின் தெளிதேன்.

சிந்தா மணிச்செய்யுள் - புலவர்

சிந்தையுள்ள குறையெல்லாம் தந்து நிறைக்கும்.

மணிமே கலைநூலே - தமிழின்

மாகலை மீதேயணியும் மேகலையாகும்.

தேனார் திருக்கோவை - பலர்தம்

திறத்தினுக் கேற்றபடி தெரியக் காண்பார்

தேவாரத் திவ்யப் - பதிகம்

செழிய பக்திச் சுவையை வழியவூட்டும்

கற்றோர் புகழ்ந்தேத்தும் - அகநூற்

கலித்தொகை தீர்க்கும்மணக் கலித்தொகையே.

11