54
செந்தமிழ்க் காஞ்சி
3
வடமொழியின் கிளையே வண்டமிழ் என்று காட்டும் மடவகர முதலிய மன்னும் இத்தமிழ் நாட்டும்
4
(தமிழனே)
மறைமலை யடிகளை மறைத்தனர் முற்றும் இங்கே மறையவர் கையிற் சேரின் மலர்வது தமிழ் எங்கே?
(தமிழனே)
5
அரியணை மேல்தமிழை அமர்த்தினோம் என்றே சொல்லிப் புரியணை மேலிருத்திப் பொருத்துவர் பின்னே கொள்ளி
(தமிழனே)
(தமிழனே)
(தமிழனே)
6
இந்தியும் எந்தா யென்றே ஏற்றித் தொழுது நின்றார் நந்தமிழ் அந்தோ சொந்த நாட்டிலும் வாழ ஒன்றார்
7
ஆரியன் தெய்வ மென்றே அடிமைத் தனத்தில் வாழ்ந்தான் ஏரண உண்மை கண்டும் இழிந்த விலங்காய்த் தாழ்ந்தான் உ
20. தமிழன் உடைமை தமிழ் ஒன்றே 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்' என்ற மெட்டு
1
இருப்ப தெல்லாம் தமிழனுக்கே
இன்பத்தமிழ் ஒன்றே
இனியதையும் இழந்து விட்டால்
இங்கேவாழ் வில்லை
பொருத்தமுறும் தாய்க்கொலையும்
புரிகஎன் றுரைத்தால்
பொதுமதியால் அவ்வுரையின்
புன்மையறிந் திடுவீர்
(இருப்ப)