178
இசைத்தமிழ்க் கலம்பகம்
210. தமிழ் வெற்றிமுரசு
'ரத்ன மகுட ரஞ்சித பூசணி' என்ற மெட்டு
1
வள்ளுவன் யானைமே லேறி வலம் வந்து
வார்முரசம் இடிபோல முழங்கவே அறை அறை அறை தெள்ளுந் தமிழ்க்கொரு தீங்குமில்லை யினித்
தீர்ந்தது சிறையென் றறை அறை
2
நாட்டிலுள் ளதிருக் கோயில்களி லெல்லாம்
நல்ல தமிழிலே புல்லி வழிபட அறை அறை அறை
கூட்டுறவாய் ஒன்றுகூடி யெல்லாருமே
கும்பிட வாருமென் றறை அறை
3
மண்ணுல கெங்கணும் மன்னரொடு கூடி
(வள்ளு)
(வள்ளு)
மாட்சிமை யாய்த்தமிழ் வீற்றிருக்கு மென்றே அறை அறை அறை
உண்மையான வரலாறே யெந்நாட்டிலும்
ஓங்கி வளர்கென அறை அறை
211. தமிழன் நற்காலத் தொடக்கம்
பண்
―
புன்னாகவராளி
ப.
ஆடுபாம்பே எழுந்தாடு பாம்பே இனி
அழியாது தமிழென்றே ஆடுபாம்பே.
உ.1
ஆரியத்தி னாலடைந்த தாழ்வு நீங்கித் - தமிழ்
அரியணை யுற்ற தென்றே ஆடு பாம்பே
சீரியநற் செந்தமிழைப் பேசுபவரே -
நல்ல
சிறப்பை யடைவரென்றே ஆடு பாம்பே
(வள்ளு)
தாளம் - முன்னை
(ஆடு)