உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இசைத்தமிழ்க் கலம்பகம்

210. தமிழ் வெற்றிமுரசு

'ரத்ன மகுட ரஞ்சித பூசணி' என்ற மெட்டு

1

வள்ளுவன் யானைமே லேறி வலம் வந்து

வார்முரசம் இடிபோல முழங்கவே அறை அறை அறை தெள்ளுந் தமிழ்க்கொரு தீங்குமில்லை யினித்

தீர்ந்தது சிறையென் றறை அறை

2

நாட்டிலுள் ளதிருக் கோயில்களி லெல்லாம்

நல்ல தமிழிலே புல்லி வழிபட அறை அறை அறை

கூட்டுறவாய் ஒன்றுகூடி யெல்லாருமே

கும்பிட வாருமென் றறை அறை

3

மண்ணுல கெங்கணும் மன்னரொடு கூடி

(வள்ளு)

(வள்ளு)

மாட்சிமை யாய்த்தமிழ் வீற்றிருக்கு மென்றே அறை அறை அறை

உண்மையான வரலாறே யெந்நாட்டிலும்

ஓங்கி வளர்கென அறை அறை

211. தமிழன் நற்காலத் தொடக்கம்

பண்

புன்னாகவராளி

ப.

ஆடுபாம்பே எழுந்தாடு பாம்பே இனி

அழியாது தமிழென்றே ஆடுபாம்பே.

உ.1

ஆரியத்தி னாலடைந்த தாழ்வு நீங்கித் - தமிழ்

அரியணை யுற்ற தென்றே ஆடு பாம்பே

சீரியநற் செந்தமிழைப் பேசுபவரே -

நல்ல

சிறப்பை யடைவரென்றே ஆடு பாம்பே

(வள்ளு)

தாளம் - முன்னை

(ஆடு)