உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

இசைத்தமிழ்க் கலம்பகம்

296. தொண்டர்படைப் பணி

(இசைந்த மெட்டிற் பாடுக)

'நட்ட கல்லைத் தெய்வ மென்று' என்னும் செய்யுளோசை.

1

தொண்டர் கள்தி ரண்டு சென்று கண்ட வூரை யண்டுவீர் தண்ட மிழ்த்தி றங்கள் நன்று விண்டு ரைகள் செய்குவீர் இந்தி யிங்கு வந்த பின்னே என்ன தீங்கு நேர்ந்திடும் என்று மக்கள் கண்டு கொள்ள நன்றெ டுத்துக் கூறுவீர்.

2

நூற்று மேனி எண்ப தாகு மாக்க ளின்று தாமெதும் ஏட்டை யேபா ராது கையை நாட்டு கின்றோ ராதலால் கூட்டி நல்ல கொள்கை யென்று கேட்கு மாறு கூறுவர் வேற்ற வர்தம் இந்தி செய்யும் கேட்டை நன்று காணவே.

3

பட்டி னங்கள் மாநகர்கள் பாக்கம் எங்கும் செல்லுவீர் விட்டி ருக்கும் விடுமுறைகள் வேண்டு நன்மை கொள்ளுவீர் பட்டி தொட்டி யெங்கும் சென்று பற்ப லர்க்குஞ் சொல்லுவீர் பட்ட தொல்லை பற்றி யூக்கம் விட்டி டாது தெள்ளுவீர்.

298. தீக்குளித்த வேறு நால்வர்

பண்

நாதநாமக்கிரியை

தீக்குளித்தே யிறந்தார்

நால்வரும் பின்

து. ப. 1

தாளம்

முன்னை மு

தீக்கெம தூனுடல் தீந்தமிழ்க் கின்னுயிர் ஆக்கினம் எனச்சிவ லிங்கம் அரங்கநாதன்

(தீக்)