உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

5

வன்செயல்கள் செய்ததற்கு வண்மதுரைப் படுகொலையே முன்செயலாய்த் தூண்டியது முதிர்வித்ததும் சுடுகொலையே

6

(தமிழைச்)

இந்தியை யெதிர்ப்பதெல்லாம் இன்றமிழைக் காப்பதுடன் முந்திய அடிமைத்தனம் மூளாமல் தீர்ப்பதற்கே

(தமிழைச்)

302. இந்திப்போராட்டத்தில் இறந்தவர்க்கு

பண்

காப்பி

அமைதி

ப.

அமைதி அமைதி அமைதி அமைதி

247

தாளம் - ஒற்றை

2.1

அண்ணா மலையார் நகரில் சுட்ட அரசேந் திரனின் ஆவி அடைக

(அமைதி)

2

மதுரைக் கயவர் மடவாள் வெட்டால்

மாய்ந்த தமிழ மணியும் அடைக

(அமைதி)

3

எரிகை சுடுகை இரண்டால் இறந்த

ஏனோர் ஆவி எல்லாம் அடைக

(அமைதி)

303. மாணவர்க்கு அறிவுரை

கைராட்டினமே' என்ற மெட்டு

ப.

இளமாணவரே இது காணு விரே.

உ.1

ஆங்கிலந்தான் இங்கிருந்தே நீங்கியபின் - மேல்

ஓங்குவ தில்லாமலே பின் வாங்கிடுவோம்.

(இள)