உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

58. அடிகள் தமிழனுக்கு அறிவுறுத்தல்

பண்

(சிந்து பைரவி)

1

ஆரிய வேடரின் அயர்ந்தனை மறந்தே அறியாமை மீதூர அடிமையாய்த் தளர்ந்தே சீரிய கோமகன் சேயைநீ யுணர்ந்தே

செந்தமிழ் பொழியினால் தேறுவை யணர்ந்தே.

2

ஆங்கில வரசினால் அகக்கணுந் திறந்தே அறிவினால் மறுமுறை அகமதிற் பிறந்தே ஈங்குநல் லாட்சியை யேற்றினை சிறந்தே ஏதிலர் ஏமாற்றை எதிர்த்தனை விறந்தே.

3

ஈரடி மைத்தனம் ஈங்கிருந் தனவே இவற்றுளே ஆரியம் எரியள றெனவே சாரயல் ஆங்கிலம் சாய்ந்ததும் கிழமை சாணள வேறியே சறுக்கின முழமே.

4

விடுதலை புகுந்ததாய் வியந்தனை புகழ்ந்தே விழுத்தமிழ் அரணையே வீழ்க்குவை அகழ்ந்தே அடிதலை தடுமாறி அறிவுரை யிகழ்ந்தே அவலைநி னைத்துரலை இடித்தனை மகிழ்ந்தே.

5

தமிழினுக் குலகினில் தகுவதே தலைமை தமிழரும் அடையவே தாழ்விலா நிலைமை இமிழ்தரு மொழியியல் எய்துக நலமே எமதுமெய் வரலாறே எழுகவே வலமே.

6

சிவநெறி மால்நெறி செந்தமிழ் நெறியே செம்மையிற் சிவனடி சேரவே குறியே அவமுற வடமொழி அறைவது வெறியே

அதுதெய்வ மொழியெனல் அறியாமை அறியே.

51

தாளம்

முன்னை