உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

மொழிநூற் கட்டுரைகள் என்றும் தேடப்படுவதால் தேட்டு என்றும் செறிந்திருப்பதால் வெறுக்கை யென்றும் பெயர் பெற்றிருப்பதினால் செல்வம் திரட்டப்படுவது என்றும், இரு கருத்துக்கள் நம் முன்னோர்க்குத் தோன்றியிருந்தமை புலனாம். இவ்விரண்டிலொன்று திரு என்னுஞ் சொல் தோன்றுவதற்குக் காரணமா யிருந்திருக்கலாம்.

திரை என்னுஞ் சொல்லே செல்வத்தைக் குறியாமல், அதன் திரிபான திரு என்னுஞ் சொல் குறிப்பதேன் எனின், சொல்லின் பொருள் மாறும்போது சொல்லும் மாறவேண்டும் என்னும் சொல்லாக்கப் பொதுவிதி பற்றி யென்க. அல்லாக்கால் பல பொருள்கள் உடன்மயங்கிக் கருத்துணர்வு தடைப்படு மென்க.

திரை என்பதிலிருந்து திரு என்பது தோன்றியிருத்தல் திருப்பாற் கடலிலிருந்து திருமகன் தோன்றினான் என்னுங் கதையை நிலையுறுத்தும். திரை = கடல். திரை = திருமகள்.

"திரைகட லோடியுந் திரவியந் தேடு"

'நீர்போயும்

-

ஒன்றிரண்டாம் வாணிகம் இல்"

என்பவற்றாலும், பட்டினப்பாலை சிலப்பதிகாரம் மணிமேகலை முதலிய வற்றாலும், பண்டைக்காலத்திலும் நீர் வாணிகத்தாலேயே பெரும் பொரு ளீட்டப்பட்டமை அறியப்படும். கடல் போய் வந்த செல்வத்தை கடல் தந்த தென்று கூறுதல் பொருத்தமானதே. மேலும் செல்வத்தின் சிறந்த வகையான முத்தே பெரும்பாலும் கடலிலிருந்தெடுக்கப்படுவது இதனாலும் செல்வம் கடலில் பிறந்ததாகக் கூறலாம். செல்வத்தின் உருவகமே அல்லது ஆட்படையே (personification) திருமகளாதலின், அவள் திருமாலின் இருப்பிடமாகக் கூறப்படும் திருப்பாற்கடலினின்று தோன்றினதாகக் கூறப்பட்டாள் என்க. (வடமொழியிலுள்ள திரவியம் என்னும் சொல் திரவம் என்பதினின்றே தோன்றியது போலும்!)

ஆகவே, திரு என்னுஞ் சொல், தனிமொழியாகவும் அடைமொழி யாகவும் முதலாவது செல்வப்பொருளிலும் பின்பு அதன் வழிப்பட்ட பல பொருள்களிலும் தொன்றுதொட்டு வழங்கிவரும் தனித் தமிழ்ச் சொல்லாதல் பெறப்படும். இலத்தீன் கிரேக்கு ஜெர்மானியம் முதலிய மேலையாரிய மொழிகளில் இச்சொல்லில்லாமையால், இது வடசொல்லன்று என்பதும் வெளியாம். ஆரியர் நாவலந்தேயத்திற்கு (இந்தியாவிற்கு) வந்தபின், வடமொழியிற் கலந்துபோன நூற்றுக்கணக்கான திராவிட அல்லது தென்சொற்களில் திரு என்பதும் ஒன்றாகும்.

திரு என்னும் தென்சொல்லே வடமொழியில் ஸ்ரீ என்றாகி, பின்பு சீ எனத் தமிழிற் சிதைந்து வழங்குகின்றதென்க. இப்போது தமிழ்நாட்டில்