உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 47.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

பாவாணர் உரைகள் (Evolution or Creations) என்று ஒரு பொத்தகம் எழுதியிருக்கிறார். அதன் இறுதியிலே 'ரிசென்சேசன்' (Recentation) என்று ஒரு பகுதி இருக்கிறது. அது என்னவென்றால் 'கொள்கையை மீட்டுக்கொள்ளுதல், தன் கொள்கையைத் தானே மறுத் தளித்தல்' (குறிப்பு-1 ஐக் காண்க). என்பதாம். 'இளமையிலேயே பேரூக்கத்ததினாலே ஒரு கொள்கையைப் பரப்பினேன். மற்றவர்கள் அதைக் குருட்டுத்தனமாகப் பரப்பித் துரும்பைத் தூணாக்கி, ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்கி உலகத்திலே எல்லாம் பெரிய மயக்கத்தை உண்டு பண்ணி விட்டார்கள்', என்று மிக வருத்தத்தோடு சொல்லியிருக்கிறார். அதற்கு மதிப்புரை வழங்கியவர் 'நெசுபீல்டு' (J.C. Nesfield) என்று கருதுகின்றேன். அவர் இங்கிலாந்திலேயே ஒரு பெரிய மருத்துவ அதிகாரி. அவர் அதற்கு மதிப்புரை தந்திருக்கிறார். எனக்கும் அந்தக் கொள்கைதான். மாந்தனை அடுத்துச் சில குரங்குகள் இருந்தன. அவ்வளவுதான். ஆந்தரோபாய்டு (Anthropoids) மாந்தர் போலிகள் என்ற திட்டத்தில் சில குரங்குகள் இருந்திருக்கின்றன. அவ்வளவுதான்! பல குரங்குகளைப் பல இடங்களிலே கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள்! எங்குத் தாடை எலும்பு ஒன்று கிடைத்தாலும் அதை வைத்துக் கொண்டு எவ்வளவோ பெரிய மலையைக் கட்டி வைத்திருக்கிறார்கள்! இதிலே அந்தக் குரங்கினத்திலிருந்தே மக்கள் முதல் மாந்தன் வாழ்க்கையைத் தொடங்குகிறான். இப்போது பல வகையான குரங்குவகை சேர்ந்ததினாலே. ஆர்தர்லோதேசார் (Artherlopithesar) ஆர்தரோபிதர்சாந்தர போல் (Arthopithersanthropol) என்கிறவர் தென்பால் குரங்குமாந்தன், அதற்கப்புறம் பிதகேந்தரபசு எரக்டசு (Pithecanthropus Erectus) நிமிர்மாந்தன். அதன் பிறகுதான் மற்ற மாந்தர்களெல்லாம் உகோமா எரக்டசு (Home Erectus, Capiens) உகோமா சேபியன்சு என்றது கடைசியாக அந்த மாந்தன் என அவர்கள் கருதினது.

தமிழ் மறுக்கப்பட்டிருப்பதினாலே, மேனாட்டார் தமிழ் அறியாத தினாலே ஐரோப்பியர்கள் தங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அவர்களே தங்களை முதல் மாந்தன் என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள், கடைசியிலே உகோமா சேப்பியன் (Homosapien) என்று வருகிறது. மதிமாந்தன் அந்த மதிமாந்தன்தான் தமிழன். அவன் காலத்திலிருந்துதான் இந்த மாந்தன் வரலாறு தோன்றுகிறது. குரங்கிற்கும் இவனுக்கும் யாதொரு தொடர்புமில்லை. மாந்தன் அங்கே தோன்றினான். முதற்காலத்திலே பேச்சில்லாமல் இருந்தது. அவ்வளவுதான்.

-

இப்பொழுது குழந்தை இருக்கிறது, அந்தக் குழந்தையை நீங்கள் மக்கள் உறவில்லாதபடி தனியிடத்தில் பிரித்துவைத்து வாழச்செய்தீர் களானால் ஒரு மொழியும் பேசாது. அதைத் துணிந்து செய்வதாயிருந்தால் செய்து பாருங்கள். (மென்னகையுடன்). ஒரு மொழியும் பேசாது. சில சில அசைகளாகவும் சொற்களாகவும் சொற்றொடர்களாகவும் பல ஆயிர