உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

8ஆம் வேற்றுமையுருபு (MO)

தமிழ் வரலாறு

பெயர்கள் விளிக்கப்படும் நிலையில் அடையும் வடிவே 8ஆம் வேற்றுமையுருபாம். அவ் வடிவு பெயர்களின் ஈற்றைப் பொறுத்தது. விளியேற்ற பெயர்கள் பெரும்பாலும் திரியும், சிறுபான்மை திரியா.

திரியும் பெயர்கள் சேய்மைச் சுட்டாயின், அளபெடுக்கும்; திரியாப் பெயர்கள் சேய்மைச் சுட்டாயின், அவற்றிற்கு முன் அளபெடுத்த ஏ அல்லது ஓ என்னும் விளியொலி சேர்க்கப்பெறும்; அப் பெயர்களின் ஈறும் சிறுபான்மை அளபெடுக்கும். திரியும் பெயர்க்கு முன்னும் ஏ அல்லது ஓ சேர்க்கப்பெறுவதுமுண்டு.

எ-டு: இயல்புவிளி: பேரின்பம், நம்பிக்கை.

ஈறு கெடுதல்

திரிபுவிளி : ஈறு மிகுதல்

ஈறு திரிதல்

ஈற்றயல் ஈறு திரிதல்

று

ஈறு கெட்டு அயல்ஈறு திரிதல்

=

அயல்

திரிந்து திரிந்து

தெய்வமே, மகனே

ஐய, இளஞ்செழிய தம்பீ, பிள்ளாய்

மாணவீர், நம்பிமீர் அழகா, நண்பா

ஈறு

மிகுதல்-ஐயாவோ,

ஈறு கெட்டு அயல்

அம்மேயோ

சேய்மை விளி:

கண்ணா அஅஅஅ

ஏஎ௭ அண்ணா அஅஅஅ

ஓஓஓ ஐயா அஅஅஅ

ஏஎஎ பேரின்பம்

ஏஎஎ மதுரம்ம்ம்ம்

எல்ல என்னும் விளிச்சொல்

விளியொலிகளுள்,

எல்ல என்பது

தொன்றுதொட்டு

வருவதும், இருவகை வழக்கிலும் வழங்குவதும், இலக்கணத்தில் இடம்பெற்றதும் தமிழின் முன்மையையும் பிறமொழிகளின் பின்மையையும் உணர்த்து வதும், ஆங்கிலத்திற்கும் தமிழுக்குமுள்ள அணுக்கத்தைக் காட்டுவதும் ஆகும்.

எல்ல என்பது, முதற்காலத்தில். கணவனும் மனைவியும் ஒரு வரையொருவர் விளிக்கும் பொதுவொலியா யிருந்தது. இதையே,

'முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச்சொல் நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே

99

(1166)

என்று தொல்காப்பியம் கூறும். இது எல்லா என்று ஈறு நீண்டு எல்லே என்றும் திரிந்தது.