80
படவன் - பரவன் = படகேறி மீன் பிடிப்பவன். “மீன்பல பரவன் வலைகொணர்ந் திட்டனன்” (திருமந். 2031).
பரவன் - பரதவன் =1. மீன் பிடிப்போன். “மீன்விலைப் பரதவர்" (சிலப். 5:25). "திண்டிமில் வன்பரதவர்” (புறம்.24:4). 2. நீர்வணிகன், வணிகன். (சிலப் 5:157, உரை). 3. குறுநில மன்னன். “தென்பரதவர் மிடல்சாய" (புறம். 378).
பரதவன்-பரதன்=1. மீன்பிடிப்போன். “படர்திரைப் பரதர் முன்றில்' (கம்பரா. கார்கால. 74). 2. கடலோடி. “பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்" (சிலப். 2:2), 3 .வணிகன். “பரத குமரரும்' (சிலப். 5:158).
பரதவர் கடலோடிகளும் (Mariners) சுற்றுக் கடலோடிகளுமா யிருந்ததனால் (Circumnavigators), வடதிசைச் சென்று வடபார் முனையில் சிற்சில வேளைகளில் தோன்றும் வண்ணவொளியைக் கண்டு, அதற்கு வடவை யென்று பெயரிட்டனர்.
வடம் - வட வை = வடதிசை நெருப்பு. "வடவைக் கனலைப் பிழிந்தெடுத்து”
வடவனல் = வட வை.
"அக்கடலின் மீது வடவனல் நிற்க விலையோ'
99
"வெள்ளத் திடைவாழ் வடவனலை
வடவனலம் = வட வை
99
கடுகிய வடவன லத்திடை வைத்தது
(தனிப்பாடல்).
(தாயு. பரிபூர.9)
(கம்பரா. தைலமா. 86)
(கலிங். 402)
வ ம் வடந்தை = வடதிசையிலுள்ளது, வடகாற்று. வடந்தைத்தீ வடவை. “சுடர்ந்தெரி வடந்தைத் தீயும்”
(காஞ்சிப்பு. இருபத். 384).
உத்தர மடங்கல் = வட வை (திவா.). உத்தரம் = வடக்கு. மடங்கல் = கூற்றுவன்போல் உலகையழிக்கும் ஊழித்தீ. உத்தரம் = வடக்கிலுள்ள ஊழித்தீ, வடவை (பிங்.).
பாரின் தென்முனையிலும் வடவை போன்ற ஒளி தோன்று மேனும், ஆரியர் வருகைக்கு முற்பட்ட பண்டைத் தமிழிலக்கியம் முற்றும் அழியுண்டு போனமையால், அதைப்பற்றிய இலக்கியக் குறிப்பும் இறந்துபட்டது.
ப