உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

وو

நாட்டுப் பகுதிகளை ஆண்டிருக்கலாம். “நாற்படை வன்னியர்’ (கல்லா.37:15) என்னுந் தொடரில், வன்னியர் என்பது குறுநில மன்னரையே குறிக்கின்றது. கடம்பர் என்னும் சொல்லைப்போல் வன்னியர் என்பதையுங் கொண்டால். அது தென்சொல்லேயாகும். கிறித்துவிற்குப் பிற்பட்டகாலத்திலேயே,வடசொல் தமிழரசர்பெயர் வழக்கிற் புகுந்தது; குலப் பிரிவும் தலையெடுத்தது.

இனி, வன்னியன் என்னும் சொல், கள்ளர் வலையர் முதலிய சில குலத்தாரின் பட்டப் பெயராக வழங்குவதையும் அறிதல் வேண்டும். சத்திரியன் (க்ஷத்ரிய) என்னும் வடசொல், வல்லபம் என்னும் பொருளதே. ஆதலால், வன்னியர்குல வல்லபர் என்று வழங்குவதே. இக்காலத்திற் கேற்றதும் மோனையழகு அமைந்ததுமாகும். பறம்பன்

இடம் - திருநெல்வேலி, மதுரை, புதுக்கோட்டை.

தொழில் - தோல் வேலையும் சுண்ணாம்புக்கல் சுடுதலும், சருப்புத் தைக்கும் தமிழக் குலத்தான் இவனே. செம்மான் (சருமன்) என்பது வடசொல்.

பறையன்

பெயர் - பறையன், புலையன்.

தொழில்

-

பறையடித்தல், பறையறைந்து விளம்பரஞ் செய்தல், முரட்டுத் துணி நெய்தல், கூலிவேலை செய்தல், பிணஞ்சுடுதல். பிரிவு - பல புறமணப் பிரிவுகள்.

பட்டம் - சாம்பான், மூப்பன், பிள்ளை.

பாணன்

-

பெயர் விளக்கம் - பண் = பாட்டு, இசை. பண் - பாண் பாணன் = பாடகன், இசைத் தொழிலாளன்.

தொழில் - பண்டு : வாய்ப்பாட்டு, குழலிசை, யாழிசை. இன்று : தையலும் கூத்தும் (தமிழ்நாடு).

குடை கட்டல், மீன் பிடித்தல், பேயோட்டல் (மலையாள நாடு).பட்டம் - பணிக்கன்.

மறவன்

இட

டம்

-

பாண்டிநாடு.

தொழில் - பண்டு : போர்த் தொழில்.

இன்று : காவல், பயிர்த்தொழில், கல்வித்தொழில்.