உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

வண்ணமும் கணக்கற்ற திருப்புகழ் வண்ணமும்), பாட்டுவகை (கணக்கற்ற வண்ண மெட்டுகள்).

வண்ணம் என்னும் சொல்லிற்குரிய பொருள்கள், பெரும் பாலும், வரி, வரணம் என்னும் சொற்கட்கு முண்டு.

அவ்வண்ணம் இவ்வண்ணம் என்பன, அப்படி இப்படி என்று பொருள்பட்டுப் பொதுவான வகையைக் குறிப்பன.

வண்ணம்

-

வரணி

இன்னணம்.

வ. வர்ண். வரணனை வ. வர்ணனா.

-

இன்ன

வண்ணம், வரணம் என்னும் இரு தென்சொற்களையும் வடசொல்லென மயங்கி, வரணம் என்பதை வருணம் என்றும், வரணி என்பதை வருணி என்றும், வரணனை என்பதை வருணனை என்றும், அகரத்தை உகரமாக மாற்றி எழுதுவதோ டமையாது, வண்ணம், வண்ணி என்னும் சொற்களையும் வர்ண, வர்ண் என்னும் வடசொல் வடிவுகளின் திரிபாகக் கொள்வா ராயினர்.

நால்வகை வரணப் பகுப்பின் பின்னரே, பேருலக வடிவான விராட்' என்னும் பரம்பொருளின் முகத்தினின்று பிராமணனும், தோளினின்று (புயத்தினின்று) சத்திரியனும், தொடையினின்று வைசியனும், பாதத்தினின்று சூத்திரனும் தோன்றினர் என்னும் 'புருட சூத்தம்' (புருஷ ஸூக்த) இருக்கு வேதம் பத்தாம் மண்டலத்தில் செருகப்பட்டது. பேருலக வடிவான பரம்பொருட் கருத்தும், பிராமணர்க்குத் தமிழரொடு தொடர்பு கொண்டபின் தோன்றியதே.

முகம் முதலிய நான்கனுள்ளும், முகமே உச்சியிலும் ஏனை மூன்றும் ஒன்றனொன்று தாழ்ந்தும், முறையே மேலிருக்கும் ஒன்றையும் இரண்டையும் மூன்றையும் தாங்கியும் இருப்பது போல், நால் வரணத்துள்ளும் பிராமணனே தலைமையானவன் என்பதும், ஏனை மூவரும் முறையே ஒருவரினொருவர் தாழ்ந்தவரும் மேலுள்ள ஒருவனையும் இருவரையும் மூவரையும் தாங்க வேண்டியவருமாவர் என்பதும்; நாலுறுப்பும் ஒரே ஆள் வடிவான பேருலக மகன் (விராட் புருஷ) கூறுகளாதலால், நால்வரணமும் இறைவன் படைப் பென்பதும் கருத்தாம்.

இனி, கல்வித் தொழிலுக்கு வாயும் (நாவும்) மூளையும், போர்த்தொழிலுக்குத் தோளும், இருந்து துலை நிறுத்தற்குத் தொடையும், நடந்து பாடுபடுதற்குப் பாதமும் வேண்டுமென்பது உட்கருத்தாம்.

இனி, போருக்கு வேண்டும் தோள்வலிமை மறக்குடியினர்க்கும், வணிகத்திற்கு வேண்டும் பண்டமாற்றுத் திறமை வாணிகக் குடி