உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

தொல்காப்பியருக்குப் பின் ஆரியச் சூழ்ச்சியாலும் தன்னலப் பற்றாலும் மூவேந்தரிடையும் அடிக்கடி போர் மூண்டதனாலும், துணையரசரும் குறுநிலமன்னரும் தம் வேந்தர்க் கடங்காது முடிசூடி முழுவுரிமை யரசரானதனாலும், சோழநாட்டின் வடபகுதி தொண்டை நாடென்றும், சேரநாட்டின் கீழ்ப்பகுதி கொங்கு நாடென்றும் பிரிந்து போயின.

தொண்டைநாடு

தொண்டைநாடு ஆர்க்காடுபோல் நிலைத்திணையாற் பெயர் பெற்றதாகத் தெரிகின்றது. தொண்டை என்பது கோவைக் கொடியையும் ஆதொண்டையையும் குறிக்கும். ஆதொண்ை என்பது காற்றோட்டிச் செடிக்கும் காற்றோட்டிக் கொடிக்கும் பொதுப்பெயர். இம் மூன்றனுள் ஒன்று மிகுந்திருந்த நிலப்பகுதி தொண்டைநாடெனப் பெயர் பெற்றது.

திரையன் என்பது நெய்தல்நிலத் தலைவன் பெயர். ஆர்க்காடு, செங்கழுநீர்ப்பட்டு, நெல்லூர் ஆகிய மும் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது தொண்டைநாடு. ஒருகால் நெய்தல்நிலச் சிறப்புப்பற்றி, அந் நாட்டரசன் திரையன் எனப் பெயர் கொண்டிருக்கலாம். நாகபட்டினத்துச் சோழன் நாககன்னியைப் புணர்ந்து ஒரு புதல்வனைப் பெற்றானென்று நச்சினார்க்கினியர் கூறுங் கதையும், கிள்ளிவளவன் பீலிவளை என்னும் நாககன்னியைப் புணர்ந்து ஒரு புதல்வனைப்பெற்றானென்று சீத்தலைச் சாத்தனார் கூறுங் கதையும், பல செய்திகளில் வேறுபட்டனவும் வெவ்வேறு காலத்தனவும் ஆகும். சோழன் கரிகாற் பெருவளத்தான்மேற் பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனாரே பெரும்பாணாற்றுப்படையில், கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக

66

என்று இளந்திரையனைப் பல தலைமுறைப்பட்ட ஓர்ஆள்குடியின னாகக் கூறியிருப்பதால், மேற்கூறிய கதை யிரண்டும் பிற்காலத்தன வென்றும் பெரும்பாலுங் கட்டுச்செய்தி யென்றும் அறிக.

அஃதாயின், “அந்நீர்த் திரைதரு மரபின் உரவோ னும்பன் என்று பாடியதை இளந்திரையன் எங்ஙனம் ஒத்துக்கொண்டா னெனின், ஆரியச் சார்பால் அக்காலத் தமிழர் பகுத்தறிவை யிழந்துவிட்டதனால்,

66

நீயே, வடபான் முனிவன் தடவினுள் தோன்றி

நாற்பத் தொன்பது வழிமுறை வந்த

வேளிருள் வேளே

99

(புறம்.201)