உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

கொண்டிருத்தல் கூடும். ஆயின், அவன் முன்னோரே அதை விட்டு விட்டதனாலும், நாட்டை வளம்படுத்தும் நீர் வணிகத்திற்குப் பூம்புகார் போல் ஒரு துறைநகரே ஏற்றதா யிருந்ததனாலும், காடுங்கோளூரிலேயே நிலைத்துவிட்டான்.திருமால் கோவிலாகிய ஆடகமாடம், கருவூரிற் போன்று கொடுங்கோளூரிலும் கட்டப் பட்டிருத்தல் வேண்டும். அக்காலத்திற் பொன்னிற்குப் பஞ்ச மில்லை. செங்குட்டுவன் காலத்திற் கொங்குநாட்டுப் பகுதியையாண்ட சேரர் குடியினர், தகடூர் அதிகமான் சரவடியினரே.

நெடுஞ்செழியன் ஆரியப்படையை வென்றிருந்ததனாலும், செங்குட்டுவன் படை கங்கையைக் கடத்தற்கு நூற்றுவர் கன்னர் (சாதகர்ணி? சாதவாகனர்?) உதவியதனாலும், கி.பி.2ஆம் நூற் றாண்டில் ஆந்திரப் பேரரசிற்குத் தமிழ்நாடு உட்பட்டிருந்த தென்று கொள்ள இடமில்லை.

கடைக்கழக முடிவு

கி.பி.3ஆம் நூற்றாண்டில், உக்கிரப் பெருவழுதி காலத்தில், பாண்டிய வரசும் கடைக்கழகமும் குலைந்தன.

முதலிரு கழக இலக்கியமும் முற்றும் ஆரியரால் அழியுண்டத னால், இக்காலத்திற் சிலர் கடைக்கழகம் ஒன்றே இருந்ததெனக் கருதுவர். வையாபுரிகளோ, அதுவுமிருந்த தில்லையென்றும், கி.பி. 9ஆம் நூற்றாண்டில் மதுரையில் தோன்றிய சமண சங்கம் ஒன்றே தமிழகத்திலிருந்த பண்டைத் தமிழ்க் கழகம் என்றும் கூறுவர்.

10ஆம் நூற்றாண்டினரான பட்டினத்து அடிகள் கழகத்தைக் குறிக்கும் சங்கம் என்னும் வடசொல்லும் பெரிய சங்கைக் குறிக்கும் சங்கம் என்னும் தென்சொல்லும் வடிவொத் திருப்பதால், சங்கைப் பயன்படுத்தும் காலம் நோக்கி அதை மூன்றாக்கி,

66

முதற்சங் கமுதூட்டும் மொய்குழலா ராசை

நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் - கடைச்சங்கம் ஆம்போ ததுவூதும் அம்மட்டோ இம்மட்டோ நாம்பூமி வாழ்ந்த நலம்

99

(பொது)

என்னும் வெண்பாவில், பண்டைத் தமிழ்க் கழகம் மூன்றென்பதைக் குறிப்பாக வுணர்த்துதல் காண்க.

நல்விலங்கு பூட்டும் என்றது திருமணத்தன்று ஊதப்பட்டதை. அக்காலத்தில் மங்கல வினைக்கும் சங்கூதப்பட்டது. ஆம்போது என்றது இறந்தபின் ஊதப்படும் வேளையை. மூவிடத்தும் சங்கம் என்னும் வடிவே அமையுமாறு, முதற்சங்கம் பாலூட்டும் என்று பாடியிருக்கலாம். ஆயின், பாலூட்டுவது சிறு சங்காதலால், அதைச் சங்கு என்று குறித்தார்.