உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

சுல்லீ- வ. சுல்லி (C).

சுல்-சுள். சுள்ளெனல்

எரிதல், சுடுதல், காய்தல்.

சுள்-சுள்ளை = மட்கலஞ் சுடும் இடம். சுள்ளை-சூளை.

சுள்-சுர்-சுரம் சுடும் பாலை நிலம்

சுரம்-சுரன் = தீ வடிவான தேவன். வ. ஸுர.

அல் (அல்லாத)-அ.ஒ.நோ:நல்-ந.

அசுரன்

நோய்,

= சுரனல்லாதவன். ஒ.நோ: அவலம் = வலமின்மை, துன்பம், துயரம்.

பிராமணர் தம்மைச் சுரர் என்றதனால், தாமல்லாத தமிழரும் திரவிடருமான பழங்குடி மக்களை அசுரர் என்றனர்.

கொல்லேறடக்கல், திரிபன்றியெய்தல், கனவில் நாணேற்றல், கடுமாக் கொல்லல் முதலிய அருமறவினை செய்து மணத்தல், பழங்குடி மக்கட்கே உரியதும் இயல்வது மாதலின், அது அசுரமணம் எனப்ப ட்டது.

வடநாட்டிலும் தென்னாட்டிலும் பல அரசரும் அறிஞரும் பிராமணியத்தை எதிர்த்ததனால், அசுரன் என்னுஞ் சொற்குக் கொடியவன் என்னும் பொருளை ஊட்டிவிட்டனர்.

தமிழப் பண்பாட்டழிவு

பூஞ்சாற்றூர்ப் பார்ப்பானை ஆவூர் மூலங்கிழார் புகழ்ந்ததும் பிராமணரை வணங்குமாறு காரிகிழார் வேண்டியதும்,

CC

ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து

""

(புறம்.367) என்று ஔவையார் பாடியதும், தமிழப் பண்பாட்டொடு முரணு 6 வன வாகும்.

தமிழர் ஒற்றுமைக் குலைவு

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கிருந்தாரைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், ஒருவீர் ஒருவீர்க் காற்றுதிர் இருவீரும் உடனிலை திரியீ ராயின் இமிழ்திரைப் பௌவம் உடுத்தவிப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே

அதனால்,

நல்ல போலவும் நயவ போலவும்