உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைக்காலம்

67

அக் கழகத்தில் இருந்திருப்பின், அவர் வேறொருவரா யிருந்திருத்தல் வேண்டும்.என்ரி, வேண்டும். என்ரி, சியார்சு, எட்வார்டு என்னும் பெயரினர் பலர் இங்கிலாந்தரசரா யிருந்ததை நோக்குக.

முடிநாகர் என்பார் சூட்டுநாகர் என்னும் நாகர் வகுப்பார். நாகவுருவைத் தலையில் அணிந்திருந்ததனால் அப் பெயர் பெற்றதாகத் தெரிகின்றது. முடிநாகரின் அரையர் முடிநாகராயர்.

66

'கீண்டது வேலை நன்னீர் கீழுறக் கிடந்த நாகர்

வேண்டிய வுலக மெங்கும் வெளிப்பட மணிகள் மின்ன

ஆ ண்டகை யதனை நோக்கி யரவினுக் கரசர் வாழ்வுங் காண்டகு தவத்த னானேன் யானெனக் கருத்துட்

கொண்டான்.

99

என்னும் கம்பராமாயணக் கடல்தாவு படலச் செய்யுள் (20) ஈண்டுக் கவனிக்கத் தக்கது.

நிதியின் கிழவன் என்றது அளகையாளி அல்லது திருமாவளவன் என்பது போன்ற பெயருடைய ஒரு புலவரை.

தலைக்கழகக் காலத்துப் பாண்டிநாடு குமரிமுனைக்குத் தெற்கில் ஏறத்தாழ ஈராயிரங்கல் தொலைவு பரந்திருந்ததனால், அக்கழகப் புலவர் ஐந்நூற்று நாற்பத் தொன்பதின்மர் என்பதி லும் அவருள்ளிட்டுப் பாடினார், நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர் என்பதிலும், இம்மியும் ஐயுறவிற்கு இடமில்லை. கழகமிருந்தார் நிலையான உறுப்பினர்; உள்ளிட்டுப் பாடினார் இடையிடை வந்து பாடிச்சென்ற பிறர்.

அவர் பாடியதாகச் சொல்லப்படும் பரிபாடலும் முது நாரையும் முதுகுருகும் களரியாவிரையும் அக்காலத்துப் பொதுவிலக்கியமே. அவற்றுள், முதலது இசையிலக்கியமும் இடையிரண்டும் இசையிலக் கணமுமாகும். அந்நான்கனுள் ஒன்றுகூட இக்காலத்தில்லை. கலிப்பாவின் திரிபான பரி பாடல் தலைக்கழகக் காலத்திற் பாடப்பட்ட தென்பது ஐயத்திற்கிட L மானதே.

தலைக்கழகத்தைப் புரந்த பாண்டியர் எண்பத்தொன் பதின்மர் என்பதிலும், அவர் ஆண்ட காலம் நாலாயிரத்து நானூற்று நாற்பதியாண்டு என்பதிலும், அவருட் பாவரங் கேறினார் எழுவர் என்பதிலும், எவ்வகை ஐயத்திற்கும் இட மில்லை. அக்காலத்து மக்கட்கு வாழ்நாள் நீண்டிருந்ததனால், தலைக்கு