பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 223 வச்சுடு, போ, - என்றார். கையில் வைத்திருந்த விழாக் குழு சம்பந்தமான தாள்களையெல்லாம் அப்படியே வைத்துவிட்டு வாசற்பக்கமாகச் செல்லத் தொடங்கினேன். முட்டாளு, இங்கேவா! உன்னையா போகச் சொன்னேன். உன்னை அப்படிச் சொல்வேனா? இந்த விஷயத்திலிருந்து நீ வெளியே போ என்று தான் சொன்னேன். நீ உள்ளே வா, இப்படி உக்காரு என்று அருமையுடன் அழைத்தார். உள்ளே போனேன். தமது சாய்வு நாற்காலியின் கைப்பிடியில் என்னை உட்கார்த்தி வைத்துக் கொண் டார். இன்னும் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று கேட்டார். சொன்னேன். அனைவரையும் உள்ளே அழைத்து உட்காரச் சொன்னார். பிறகு என்னிடம், ஆமாம், கி.ஆ.பெ. விசுவநாதத்தை உனக்கு முதலில் தெரியுமா? அல்லது என்னை முதலில் தெரியுமா? என்று கேட்டார். ஏன்? உங்களைத்தான் முதலில் தெரியும் என்றேன். "அப்போ, அவர் விலகிக் கொண்டால் நீயும் அவரைப் பின்பற்றி ஏன் விலகிக் கொண்டாய்? ஒருவேளை உனக்கு நெல் அனுப்ப மாட்டாரா?” என்றார். “உள்ளுக்காரர், பெரிய மனிதர். ஒருவேளை எனக்கு அனுப்பும்படியை நிறுத்தவிடவும் கூடும்” என்று பதில் சொன்னேன். இதற்கு மேல் அவரிடம் பேச ஒன்றுமில்லை. சற்றுப் பொறுத்து நான் இப்பொழுது பேசலாமா?' என்று கேட்டேன். "பேசு" என்றார். “யாரை முதலில் தெரியும் என்றல்லவா கேட்டீர்கள். உங்களையும் எனக்கு முதலில் தெரியாது. உங்கள் கவிதைகளைத்தான் முதலில் தெரியும். அதைத் தெரிந்து கொண்ட காரணத்தால்தான் உங்களைத் தெரிந்து கொண்டேன். ஆகையால் எனக்கு யாரும் படியளக்க வேண்டியதில்லை. உங்கள் தயவும் எனக்கு வேண்டியதில்லை. விசுவநாதம் எழுதிய கடிதங்களுக்கு நீங்கள் ஒரு விடையும் தராமல் வாளாவிருந்து விட்டீர்கள். மனம் நொந்த அவர், குழுவிலிருந்து விலக முடிவு செய்தது மிகவும் சரியென்றும், விழாக் குழுவையே நீங்கள் அவமதித்து விட்டீர்கள் என்றும் எனக்குப்பட்டது. எனவே நாங்கள் அனைவரும் இதிலிருந்து விலகிக் கொள்வது என்று முடிவு செய்தோம். ஆயினும் உங்கள் கவிதைகள் என்னிடம் உள்ளன. அவற்றை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. உங்களைக் காட்டிலும் உங்கள் கவிதைகளே எனக்கு அதிகம் மதிப்புடையவை” என்று வேகமாகப் பேசினேன். சாய்வு நாற்காலியிலிருந்து கவிஞர் துள்ளியெழுந்தார். வழக்கம் போல் முழங்கால் வரையிலும் வேட்டியைச் சுருக்கிப் பிடித்துக் கொண்டார். சுற்றியிருந்தவர்களைப் பார்த்துச் சொன்னார்.