பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 84 — தமிழ்ப் பண்பு தலையெடுக்கும்; ஒடுங்கும் கீழ்மை! தண்டமிழில் பெருங்கலைகள் ஊற்றெடுக்கும்! உமிழ்தக்க தீயவரும் பிழை உணர்ந்தே உயர்ந்தோரும் பாராட்டத் திருந்து வார்கள்! கமழ்பெருக்கும் தமிழ்மணமிவ் வுலக மெல்லாம்! கன்னியர்க்கும் இளையோர்க்கும் மெய்ம்மைக் - . (காதல் அமிழ்தூற்றுப் போல்பெருகும்; பெருகும் வாய்மை: அனைத்துலகும் ஒன்றென்னும் நினைவுண் டாகும். பொருள் மேய்ச்சல் விலகிப்போம்; பொய்செத் - (துப்போம்; புத்துலகத் தொடர்புவரும்; அறிவு வீறும் ! இருள் விலகும்; ஒளியிறக்கும் தமிழர் வாழ்வில்: ஏமாற்று வெறும்பேச்சு தொலைந்து போகும். அருள் மலரும்; அன்பூறும் செயலில் பேச்சில் ! அனைவருமிங் கொருநிறையென் றறம்பி றக்கும். மருள் வாழ்க்கை போயொடுங்கும் வறுமை மாயும். மாளாத இலக்கியங்கள் சுரப்பெ டுக்கும் ! முடிவாக ஒருசெய்தி! தமிழர் வாழ முழுவாழ்வும் உழைத்தீர்கள்; மனைவி மக்கள் விடிவாக ஒருநலமும் தேட வில்லை; - விளைவின்றி அவரின்று வாடு கின்ருர். அடிவாழைக் கன்றுக்கிங் காக்கமில்லை அவர்க்காகக் கண்ணிர்விட் டழுகின் றேன்.நான். மடியாத தமிழுணர்வே மலேயா நெஞ்சே! மாளாத புகழ்க்குன்றே! வணக்கு கின்றேன்! (சுவடி 5. ஒலை 4. (1967),