பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

س- 88 س-- தூங்கிக் கிடக்கும் தமிழனின் தொடையில் கயிறு திரிப்ப தெப்படி? அதன்பின் வயிறு கழுவுவ தெப்படி நாமெலாம்? -என்றே ஆரியப் பார்ப்பன முதலைகள் பாரதி தாசனர் பாடிக் குவித்த இலக்கக் கணக்கான பாடலை எல்லாம் திட்ட மிட்டுப் பரவாமல் தடுத்தன. தில்லிக் கவைதாம் தெரியா திருக்கக் கொல்லைக் கதவை இறுக்கிப் பூட்டின! இருபதாம் நூற்ருண் டெல்லை வரைக்கும் பாரதி யாரே மகாகவி' என்று காவடி எடுத்துக் காழ்காழ் என்றன. பாரதி யாரைநாம் பழித்திட வில்லை; பாரதி யாரை,நாம் பகைக்கவும் இல்லை! பாரதி யார் ஒரு பார்ப்பனன் என்பதால் பாரறி யும்படி செய்தனர் பார்ப்பனர், அப்படிச் செய்திட ஆரியப் பார்ப்பானுக் கெப்படி முடிந்தது என்கின் lர்களா ? செப்படி யாட்டம் குறளி மாயங்கள் அவன்அறி. வாளு? என்கின் lர்களா? அப்படி ஒன்றும் அறிவிலான் அலன்அவன்! இப்படிப் பட்ட அறியாமை யெல்லாம் தமிழனுக் கிருக்கும் தாழிட்ட சொத்துகள்! பார்ப்பான் திறமையோ தனிப்பட்ட திறமை ஆர்ப்பரிப் பென்பதோ அணுவிருக் காது!. கொப்படிக் குரங்காய்க் குந்தி யிருப்பான்! இப்படிப் பட்டதோர் நிலையெதிர்ப் பட்டால் தப்படி யாக அடித்துத் தள்ளுவான். கடுகைக் குன்றெனக் கதைத்துத் தள்ளுவான். குன்றைக் கடுகெனக் குறைத்துக் காட்டுவான். தரையில் கிடப்பதைத் தலைமேல் வைப்பான். தலைமேல் வைத்ததைத் தரையில் கிடத்துவான்.