திருமண முயற்சி 101
என ஆங்கு, -
அறத்தொடு கின்றேனக் கண்டு, திறப்பட என்னையர்க்கு உய்த்துரைத்தாள் யாய், அவரும், தெரிகணை கோக்கிச் சிலேநோக்கிக் கண் சேந்து ஒருபகல் எல்லாம் உருத்தெழுந்து ஆறி, "இருவர்கட் குற்றமும் இல்லையால்’ என்று தெருமந்து சாய்த்தார் தலை; தெரியிழாய்! நீயும்கின் கேளும்புணர வரைஉறை தெய்வம் உவப்ப, உவந்து குரவை தழீஇயாம் ஆடக் குரவையுள் கொண்டு கிலேபாடிக் காண்; கல்லாய், நன்குள் தலைவரும் எல்லை நமர்மலைத் தம்காண்தாம் தாங்குவார் என்நோற் றனர்கொல்: புனவேங்கைத் தாதுஉறைக்கும் பொன்அறை முன்றில் நனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்ருே? கனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்ருே? விண்தோய்கல் நாடனும் நீயும் வதுவையுள் பண்டறியா தீர்போற் படர்கிற்பீர் மற்கொலோ? பண்டறியா தீர்போற் படர்ந்தீர் பழங்கேண்மை கண்டறியா தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ? மைதவழ் வெற்பன் மனஅணி காணுமல் கையால் புதைபெறுஉம் கண்களும் கண்களோ? என்னமன்? நின்கண்ணுற் காண்பென் யான்; நெய்தல் இதழ் உண்கண் கின்கண்ணு கென்கண்மன;
என ஆங்கு,
நெறிஅறி செறிகுறி புரிதிரிபு அறியா
அறிவனே முந்துlஇத்
தகைமிகு தொகைவகை அறியும்
சான்றவர் இனமாக