பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 8 . பிரசவ கால ஆலோசனைகள் அடைந்துவிட்டால் அதற்கேற்ப தங்களது சூழ்நிலையை விவேகத்துடன் அமைத்துக் கொள்ளுவதில் தம்பதி நாட்டம் கொள்ள வேண்டும். தாம்பத்திய உறவு நிகழும்பொழுதே பெண், தான் கருவுறும் நிலையை நிர்ணயம் செய்து கொள்ளும் சில அறிகுறிகளை "அஷ்டாங்க ஹ்ருதயம்-சாரீஸ்தானம்’ என்னும் மலையாள் நூல் கீழ்க்காணும்படி சொல்லு கிறது. - - * 1. உடற் சேர்க்கையின்போது, இந்திரியம் எனப் படும் ஜீவதாது வெளியே வராமல், உள்ளுக்குள்ளாகவே இழுத்துக் கொள்ளப்படும். - - 2. புணர்ச்சியின் சமயத்தில் நிறைந்த திருப்தி உண்டாகும். - - 3. வயிறும் ஜனனேந்திரியமும் கனத்திருப்பதாக ஓர் உணர்வு எழும். - 4 ஜனனேந்திரியத்திலும் இருதயத்திலும் ஒருவகைத் துடிப்பு இருக்கும். - 5. உடற் சோர்வு ஏற்படும். 6. தாகம் கூடுதலாகும். 7. ரோமாஞ்சலி ஏற்படும். இத்தகைய உள்ளுணர்வுக் குறியீடுகளாலும் புறச் சலன அடையாளங்களாலும் கருத்தரிக்கும் நிலையினை உணரக்கூடும். - * - ... . . இவை தவிர, பொதுவாக ஒரு பெண் கர்ப்பம் தரித் திருக்கிறாளா என்பதை அறியத்தக்க சில அடையாளங் களையும் நாம் கவனிக்க வேண்டும்.