பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தீமைக்கு நன்மை செய்த தம்பி

181

மூத்தவனை அவனுடைய மோசமே நாசஞ் செய்துவிட்டது. எப்படியெனில் அவன் தம்பிக்குப் பயந்து கொண்டு யாரிடத்தில் பொருள்களை அந்தரங்கமாய்க் கொடுத்து வைத்தானோ அவர்கள் எல்லாரும் அந்தத் தனங்களை அபகரித்துக் கொண்டு அவனுக்கு நம்பிக்கைத் துரோகஞ் செய்து விட்டார்கள். தனக்கு யாதொரு சொத்துங் கிடையாதென்று அவனே நியாய சபையார் அறியச் சொல்லிவிட்டபடியால் அந்த நம்பிக்கைத் துரோகிகள் மேல் அவன் வழக்குத் தொடர மார்க்கம் இல்லாமற் போவிட்டது. பூஸ்திதிகள் பல பெயர்களுடைய கடன்களுக்குப் பாத்தியமாயிருப்பதாக அவனே தன் தம்பி வழக்கில் ஒப்புக்கொண்டபடியால் அந்தப் பொய்யான கடன்காரர்களெல்லாருந் தங்களுக்கு மெய்யாகக் கடன் வரவேண்டியதுபோலத் துர்வழக்குகள் செய்து அந்தப் பூஸ்திதிகளையெல்லாம் ஏலம் போட்டுக் கைவசப் படுத்திக்கொண்டார்கள். அவனுக்கு வரவேண்டிய கடன்களையெல்லாம் நியாஸ்தலத்தில் மறைத்த படியால் கடன் கொடுக்க வேண்டியவர்களெல்லாரும் அவனை மோசஞ் செய்து விட்டார்கள். அவனும் அவர்கள் மேல் வழக்கிடக்கூடாமற் போய்விட்டது. இவ்வாறு கைப்பொருள்களையெல்லாம் இழந்து கன தரித்திரனாய்ப் போய் விட்டான். மூத்தவன் வீட்டில் மூத்தவளே வந்து குடியிருக்கத் தலைப்பட்டதால் பிக்ஷைத் தொழிலைத் தவிர வேறு வழியில்லாமற் போய்விட்டது. அவன் கனிஷ்டத் துரோகியென்று ஊரெங்குந் தெரியுமானபடியால் அவனுக்கு இரங்குவார் இல்லை. அவன் தம்பியிடத்திற்குப் போகலாமென்றால் அவனுடைய மனச்சாக்ஷி இடம் கொடுக்க வில்லை.

மூத்தவனும் அவன் பெண்சாதி பிள்ளைகளும் கஷ்டப்படுகிறதை இளையவன் கேள்வியுற்று அவர்களைத் தன்னிடத்துக்கு வரும்படி அவன் கடிதம் அனுப்பினதுமல்லாமல் அவர்களுடைய வழிச் செலவுக்காகப் பணமும்