பக்கம்:பிராயச்சித்தம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் #83 அவரைத் தாண்டிச் சென்றபின் தயங்கி நின்று திரும்பி நேரே அவரிடம் வந்தது. அப்போக்கூட முகத்தை சாமர்த் தியமாக மறைத்துக்கொண்டு, 'மணி என்ன? பெண் குரல். தெரியாது. ' 'ஏன், ரிஸ்ட்வாட்ச் இல்லே?’’ கேட்டுக்கொண்டே கையைப் பிடித்தாள்.

  • வfங்களோ ???

தர்மராஜன் வெலவெலத்துப் போனார். 'நான்...நான்-நாக்கு ஏதோ குழற முயன்று இழுத்துவிட்டது. 'வீடு கிட்டத்தான் இருக்கு. சுத்தமாயிருப்பேன். இஷ்டப்பட்டதைக் கொடுங்கள்-நான் ரேட்டுப் பேச மாட்டேன்...” முகத்தையும் மறைத்த முக்காடு விழுந்தது. 'மதுர! மது!!' தர்மராஜன் அலறினார். மிரண்டுபோய் அவள் பின்னடைந்தாள். நிலவொளி அவர் முகத்துக்கு விளக்குப் பிடிப்பதுபோல் நேரிடையாக அவர்மேல் பட்டது. "அப்பா!' ஓடிவந்து அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். 密 家 参 ஐயா, அங்கே எங்கே போlங்க, இங்கே வாங்க. அங்கே இப்போ நாம் லாயக்கில்லே. கண்ணிருக்குக் கண்ணிர் சங்கமம் நடக்கிறது. அதற்கெதிரே த்ரிவேணியும், பிரயாகையும், பாபநாசமும், குற்றாலமும் என்ன செய்ய முடியும்?