பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பிற்காலச் சோழர் சரித்திரம் கூறப்பட்டுள்ளது. இவன் தான் எடுப்பித்த தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தானும் தன் தமக்கையும் கொடுத் தவற்றை நடுவிமானத்தில் கல்லில் வரையும்படி முதலில் குறிப்பிட்டிருப்பதொன்றே இவன் தன் தமக்கையிடத்தில் வைத்திருந்த பேரன்பையும் பெருமதிப்பையும் நன் குணர்த்து வதாகும் இவன் தன் பாட்டனாகிய அரிஞ்சயனையும் பெரிய பாட்டி யாகிய செம்பியன் மாதேவியையும் நினைவு கூர்தற்கு அறிகுறியாக முறையே வட ஆர்க்காடு ஜில்லாவில் மேற்பாடி என்னும் ஊரில் அரிஞ்சயேச்சுரம் என்ற கோயிலும் 2 திருமுக்கூடலில் ' செம்பியன் மாதேவிப் பெருமண்டபம் ' என்ற மண்டபமும் கட்டுவித்திருப்பது இவன் தன் முன்னோர்களிடத்தில் எத்துணை அன்பும் மரியாதையும் வைத்திருந்தான் என்பதை இனிது புலப் படுத்தா நிற்கும். இராசராசன் திருமுக்கூடலில் எடுப் பித்த அப் பெருமண்டபம் ஊர்ச்சபையார் கூடித் தம் கடமைகளை நிறைவேற்றுவதற்குப் பயன் பட்டது என்பது அறியத்தக்கது. இனி, இராசராச சோழன் ஆட்சிக்காலத்தில் ஆண்டு தோறும் இவனுக்குத் திறை செலுத்திக்கொண்டு வாழ்ந்து வந்த குறு நிலமன்னர் சிலர் இருந்தனர். அன்னோருள் முதல்வனாகக் கருதத்தக்கவன் திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூகாவிலுள்ள பழவரில் பழு வேட்டரையர் என்னும் பட்டத்துடன் வாழ்ந்த குறு நில 1. ' நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜேஸ்வர முடை யாருக்கு நாம் குடுத்தனவும் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும், மற்றும் குடுத்தார் குடுத்தனவும் ஸ்ரீ விமானத்தில் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிஞ்சருள வெட்டின' (S. I. 1., Vol, II, page 2) 2. S. I. I., Vol. III, No. 15. 3. Ins. 178 of 1915.