பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 முதல் இராசேந்திர சோழன் ஆகவே, சோழபாண்டியன் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற சோழ அரசகுமாரன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் இருந்த குறு நில மன் னர்கள் தாம் சுயேச்சை பெறும் பொருட்டுச் சில காலங் களில் கலகங்கள் செய்தனர் என்பதும் அவற்றை அடக்கி அந்நாடுகளில் தன் தம்பியின் ஆட்சி நன்கு நடைபெறு மாறு செய்வதற்கே, இராசாதிராசன் தன் தந்தையின் ஆட்சியின் பிற்பகுதியில் அவற்றின் மீது படையெடுத்துச் சென்றனன் என்பதும் தெற்றெனப் . புலப்படுதல் காண்க. இனி, ஈழநாடு முழுவதும் சற்றேறக்குறையப் பத்து ஆண்டுகள் வரையில் இராசேந்திரன் ஆட்சிக்கு உட்பட் டிருந்தது எனலாம். பிறகு, அதன் தென்கிழக்குப் பகுதி யாகிய ரோகண நாட்டை ஐந்தாம் மகிந்தனுடைய புதல்வன் காசிபன் என்பான் கி. பி. 1029-ல் கைப்பற்றிக் கொண்டு விக்கிரமபாகு என்ற பெயருடன் முடிசூடிக் கி. பி. 1041 வரையில் அப்பகுதியை மாத்திரம் அரசாண்டு கொண்டிருந்தான் என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அவன் சோழர்களோடு போர் புரிந்து ஈழ மண்டலம் முழுவ தையுங் கைப்பற்றித் தன் ஆட்சியின்கீழ் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் பெரும் படை யைத் திரட்டிக்கொண்டிருந்த காலத்தில் கி. பி. 1041-ல் நோய்வாய்ப்பட்டு இறந்து போனான் என்று மகாவம்சம் கூறு கின்றது. ஆனால், அவன் சோழர்களோடு நிகழ்த்திய போரில் உயிர் துறந்தானென்றும் அவனுடைய முடி முத லான அரசச் சின்னங்கள் இராதிராச சோழனால் கைப்பற்றப் பட்டன என்றும் சோழமன்னர் கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன 1. அஃது எங்ஙனமாயினும் கி. பி. 1041-ல் விக்கிரமபாகு இறந்து போனான் என்பது மகாவம்சத் தாலும் கல்வெட்டினாலும் உறுதியெய்துகின்றது. ஆகவே, அந்நாட்களில் அவனுடைய முடி முதலானவை சோழர்களுக்குக் கிடைத்திருத்தல் கூடும். விக்கிரமபாகு 1. S. I. I., Vol. IV, No. 539. 12