பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் இராசேந்திர சோழன் 179 தெற்கே பல்லாரி ஜில்லாவில் சோழர்கள் ஆட்சிக்குட்பட் டிருந்த நிலப்பரப்பில் சில பகுதிகளை அவர்கள் கவர்ந்து கொண்டனர். அந் நிகழ்ச்சியினால் மேலைச்சளுக்கியர் கட்கும் சோழர்கட்கும் பகைமை முதிர்ந்துகொண்டே வந் தது. அதனால் ஆகவமல்ல சோமேசுவரன் பட்டம் பெற்ற வுடன் சோழர்கள் அவனுடன் போர்புரிந்து தம் ஆற்ற லைக் காட்டவேண்டியது இன்றியமையாததாயிற்று. ஆகவே, இளவரசனாகிய இராசாதிராசன் பெரும் படையுடன் மேலைச்சளுக்கிய நாட்டிற்குச் சென்று தன்னாடை 1 என்ற ஊரில் சளுக்கியப் படையைப் போரிற் புறங்கண்டு, அப் படையின் தலைவர்களாகிய கண்டப்பையன், கங்காதரன் என்பவர்களையுங் கொன்றான். அப்போர் நிகழ்ச்சிகளிற் கலந்து கொண்ட சோமேசுவரன் புதல்வர்களாகிய விக்கிரமாதித் தனும் 2 விசயாதித்தனும் தம் படைத்தலைவன் சங்கமைய னோடு போர்க்களத்தைவிட்டு ஓடிவிட்டனர். பிறகு, இராசாதி ராசன் அங்குத் தனக்குக்கிடைத்த யானை குதிரைகளை யும் பெரும் பொருளையும் கைப்பற்றிக்கொண்டு, கொள் ளிப்பாக்கையையும் எரியூட்டித் திரும்பினான். மேலைச் சளுக்கியரோடு இராசாதிராசன் செய்த போர் அவனது ஆட்சியின் 26-ம் ஆண்டாகிய கி. பி. 1044-ல் அவன் |. இவ்வூர் ' தந்நாட' எனவும் ' தாந்யகடகம்' எனவும் அந்நாளில் வழங்கியுள்ளது. இப்போது குண்டூர் சில்லாவில் கிருஷ்ணா நதிக்கரையில் அமராவதி என்ற பெயருடன் உள்ளது இவ்வூரேயாகும். இவ்வூரில் நிகழ்ந்த போரில் வெற்றி பெற்ற இராசாதிராசன் மீது புலவரொருவர் பரணி பாடிப் பாராட்டி யுள்ளார். இச்செய்தி அவனது மெய்க்கீர்த்தியிற் காணப்படு கிறது. இப்பரணி நூல் கிடைக்கவில்லை. இது கலிங்கத்துப் பரணிக்கும் காலத்தாற் முற்பட்டதாகும். 2. சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களில் - விக்கி' என்று குறிப்பிடப்பட்டுள்ளவன் விக்கிரமாதித்தனே யாவன். மேலைச் சளுக்கிய மன்னருள் இவன் ஆறாம் விக்கிரமாதித்தன் எனப்படுவன். 3. S. I. I., Vol. IV, Nos. 537 and 867. Ibid, Vol. VII, No. 675. 4. கொள்ளிப்பாக்கை என்பது நைசாம் இராச்சியத்திலுள்ள ஹைதராபாத்திற்கு வடகிழக்கே 45 மைல் தூரத்தில் 'குல்பாக்' என்ற பெயருடன் உள்ளது.