பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பிற்காலச் சோழர் சரித்திரம் பரகேசரி என்னும் பட்டமுடையவன் என்பது நாம் அறிந் ததே. ஆகவே, இவன் இராசகேசரியா தல் எவ்வாற்றானும் பொருத்தமுடைத்து. கல்வெட்டுக்களில் இவனுக்கு மூன்று வகை மெய்க் கீர்த்திகள் காணப்படுகின்றன. ஒன்று ' திங்களேர் பெற வளர்' 1 என்று தொடங்குகிறது ; மற்றொன்று, ' திங்களேர் தரு' 2 என்று ஆரம்பிக்கிறது ; பிறிதொன்று, ' திருக் கொடியொடு தியாகக்கொடி ' 3 என்ற தொடர்களை முதலில் கொண்டது. அவற்றுள், ' திங்களேர்பெற' என்று தொடங்கு வது இவனது ஆட்சியின் இருபத்தாறாம் ஆண்டு வரையில் நிகழ்ந்தவற்றைக் கூறி அந்நிலையில் நின்றுவிடுகிறது. • திங்களேர் தரு' என்று தொடங்குவது, இவன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பல செய்திகளை விரித்துக்கூறும் நீண்ட மெய்க்கீர்த்தியாகும். அஃது இவனது ஆட்சியின் முப்பதாம் ஆண்டு முதல் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. சில கல்வெட்டுக்களில் மாத்திரம் காணப்பெறும் அம்மெய்க் கீர்த்தி, வேறு எங்கும் குறிக்கப்படாத சில அரிய செய்திகளைத் தன்னகத்துக்கொண்டுளது. ' திருக்கொடியொடு தியாகக் கொடி' என்று தொடங்குவது மேலே குறிப்பிட்டுள்ள மெய்க் கீர்த்தியில் காணப்படும் செய்திகளுள் சிலவற்றையே கூறு கின்றது. அம்மெய்க்கீர்த்திகளின் துணைகொண்டு இவ் வேந்தன் காலத்து நிகழ்ச்சிகளை ஆராய்ந்து காண்பது ஏற்புடையதேயாம். இராசேந்திர சோழன் கி பி. 1044-ஆம் ஆண்டில் இறந்த பிறகு, முறைப்படி இவன் சோழ இராச்சியத்திற்குச் சக்கர வர்த்தியாகிச் செங்கோல் செலுத்தத் தொடங்கினான், இவன் பிறவியிலேயே ஆண்மையும் வீரமும் படைத்தவன் ; தன் 1. S. I. I., Vol. V, No. 633. 2. Ibid, Vol. IV, No. 537. 3. Ins. 224 of 1925.