பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பிற்காலச் சோழர் சரித்திரம் இனி, இராசாதிராசன் மேலைச்சளுக்கியரோடு மூன்றாம் முறை நடத்திய போர் இவனது ஆட்சியின் முப்ப தாம் ஆண்டுக் கல்வெட்டுக்களிலும் அதற்குப் பிற்பட்ட காலத்துக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றது. ஆனால் அது பிச்சாண்டார் கோயிலிலுள்ள இவனது ஆட்சியின் 30-ம் ஆண்டுக் கல்வெட்டில் இல்லை. அம் மூன்றாம் சளுக்கியப் போர் ஒரே ஆண்டுக் கல்வெட்டில் சில வற்றில் காணப்பட்டும் சிலவற்றில் காணப்படாமலும் இருத்தலால் அஃது அவ்வாண்டின் பிற்பகுதியில் நடை பெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அதில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கூறும் கல்வெட்டுக்களும் ஒவ் வொன்றும் ஒவ்வொரு புதிய செய்தியைக் கூறுகின்றன. அவற்றை நோக்குமிடத்து, அப்போர் சில ஆண்டுகளா தல் தொடர்ந்து மிகக் கடுமையாக நடைபெற்றிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலனாகின்றது. அது கி. பி. 1048ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. எனவே, குந்தள இராச்சியத்தின்மீது அவ்வாண்டில் படையெடுத்துச்சென்ற இராசாதிராசன் கிருஷ்ணை யாற்றங்கரையிலுள்ள பூண்டூரில் மேலைச் சளுக்கியரோடு பெரும்போர் புரிந்து தெலுங்க விச்சை யன், அத்திராசன், அக்கப்பையன், கொண்டையராஜன், முஞ்சன், தண்டநாயகன் தனஞ்சயன், வீரமாணிக்கன் என்னுஞ் சளுக்கியத் தலைவர்களை வென்று, விச்சையன் தாய் தந்தையரையும் எண்ணரும் மகளிரையும் சிறைப் பிடித்து, அந்நகரின் மதில்களையும் இடித்துப் பாழ்படுத் தினன் ; அன்றியும், மண்ணதிப்பதியிலிருந்த மேலைச் சளுக்கியர் மாளிகையிலும் எரியூட்டி, அந்நகரில் வேங்கை வடிவம் பொறிக்கப்பெற்ற வெற்றித் தூண் ஒன்றும் நாட் டினான் ; பிறகு, மேலைச்சளுக்கியர்க்குரிய கடல்போன்ற சிறுதுறை, பெருந்துறை, தெய்வ வீமகசி என்னும் முத் துறைகளிலும் தன் பட்டத்து யானையை நீராட்டிச் சளுக் கியரின் வராக முத்திரை பொறிக்கப்பெற்ற வராகக் குன்றில் 1. S. I. I., Vol. V, Nos. 520 and 641.