பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழமன்னர் களின் மெய்க்கீர்த்திகள் 269 மூவெண் பெயருடை முப்புரி நூலோர் பிரியாத் தன்மைப் பெருந்திரு வுடையது பாடகச் சீறடிப் பணைமுலைப் பாவையர் நாடகத் துழங் நவின்றது சேடகச் சண்டையுங் கண்டையுந் தாளமு (ங்காள] முங் கொண்டதிர் படகமுங் குளிறு மத்தளங்களுங் கரடிகைத் தொகுதியுங் கைம்மணிப் பகுதியு முருடியல் திமிலை முழக்கம் மருடரு வால்வளைத் துணையு மேல்வளைத் தணையுங் கருப்பொலி மேகமுங் கடலுமெனக் கஞலி திருப்பொலி திருப்பலி சினத்து விருப்பொலிப் பத்தர்தம் பாடல் பயின்றது முத்தமிழ் நாவலர் நாற்கவி நவின்றது ஏவலி லருஷையொ டரஹரவெனக் குனித் தடிமைசெய் பருஷையர் வெஹுவிதம் பயின்றது அருஷைமுக் கண்ணவ னுறைவது கடவுளர் நிறைவது - மண்ணவர் தொழுவது வானவர் மகிழ்வது மற்று மின்ன வளங்கொள் மதிற் பதாகைத் தெற்றுங் கொழுநிழற் சிவபுரத்தாற்குப் பன்னாணிலைபெற முன்னா ஞரவோன் செய்த தானம். முதல் இராசேந்திர சோழன் (கங்கைகொண்டசோழன்) திருமன்னி வளர விருநில மடந்தையும் போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந் தன்பெருந் தேவிய ராகி யின்புற நெடிதிய லூழியு ளிடை துறை நாடும் 1. இவ்வேந்தனது மெய்க்கீர்த்தியின் முதல் இரண்டு வரிகள் வீரசோழியம் யாப்புப்படலம் 19-ஆம் கலித்துறை உரையில் மேற்கோளாக எடுத்துக் காட்டப்பெற்றுள்ளமை அறியத் தக்கது.