பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழமன்னர்களின் மெய்க்கீர்த்திகள் 275 சுடணிர் மகுடஞ் சூட்டிப் படிமிசை நிகழு நாளினு ளிகல்வேட் டெழுந்துசென் றொண்டிற விரட்ட மண்டல மெய்தி நதிகளும் நாடும் பாதிகளு மநேகம் அழித்தனன் வளவனெனு மொழிப்பொருள் கேட்டு வேகவெஞ் சளுக்கிய ஆகவ மல்லன் பரிபவ மெனக்கிதென் றெரிவிழித் தெழுந்து செப்பருந் தீர்த்தக் கொப்பத் தகவையிற் சென்றெதி ரேன் றமர் தொடங்கிய பொழுதவன் செஞ்சர மாரி தன் குஞ்சர முகத்தினுந் தன் றிருத் துடையினுங் குன்று றழ் புயத்தினுந் தைக்க வுந்தன் னுடன்களி றேறிய தொடுகழல் வீரர்கள் மடியவும் வகையா லொருதனி யநேகம் பொருபடை வழங்கியம் மொய்ம்பமர் சளுக்கி தம்பிசய சிங்கனும் போர்ப்புல கேசியுந் தார்த்தச பன்மனு மானமன் னவரின் மண் டலியசோ கையனும் ஆனவன் புகழா ரையனுந் தேனிவர் மட்டவி. மூலங்கல் மொட் டையனுந் திண்டிறல் நன்னி நுளம்பனு மெனுமிவர் முதலினர் எண்ணிலி யரைசரை விண்ணகத் தேற்றி வன்னிய ரேவனும் வயப்படைத் துத்தனுங் கொன்னவில் படைக்குண்ட மய்யனு மென்றின வெஞ்சின வரைசரோ டஞ்சிச் சளுக்கி குலங்குலை குலைந்து தலைமயிர் விரித்து வெந்நுற் றொளித்துப் பின்னுற நோக்கிக் கால்பரிந் தோடி மேல்கடற் பாயத் துரத்திய பொழுதச் செருக்களத் தவன் விடு சத்துருபயங் கரன்கர பத்திரன் மூல பத்திர சாதி பகட்டரை சநேகமும் எட்டுநிரை டரிகளு மொட்டக நிரைகளும் வராகவெல் கொடிமுத லிராசபரிச் சின்னமும் ஒப்பில்சத்தி யவ்வை சாங்கப்பையென் றிவர்முதல் தேவியர் குழாமும் பாவைய ரீட்டமு மினையன பிறவு முனைவயிற் கொண்டு விசையா பிடேகம் செய்துதென் றிசைவயிற் போர்ப்படை நடாத்திக் கார்க்கட லிலங்கையில்