பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பிற்காலச் சோழர் சரித்திரம் கி. பி. 940-ல் இறந்தான். அவன் புதல்வன் விக்கியண்ண ன் என்பவனும் தன் தந்தை இறப்பதற்குமுன் இறந்து விட்டான் 1. எனவே, சோழ இராச்சியத்திற்கு வடமேற்கே யிருந்த கங்க நாடு முழுவதும், கங்கருள் மற்றொரு கிளை யைச் சேர்ந்தவனும் மூன்றாம் கிருஷ்ணதேவன் தமக்கை யின் கணவனும் பராந்தக சோழனுக்குப் பகைவனும் ஆகிய இரண்டாம் பூதுகன் ஆட்சிக்குள்ளாயிற்று. ஆகவே, சோழ இராச்சியத்திற்கு வடக்கே யிருந்த நாடுகளில், பராந் தகனுக்குப் பகைவர்கள் மிகுந்து ஒருங்கு சேர்ந்திருந்தனர் என்பது தெள்ளிது. இனி, பராந்தகனும் தன் மருகன் கோவிந்தன் இரட்ட மண்டலத்தை இழந்து தஞ்சைக்கு வந்த பிறகு, வடபுலத் தில் தனக்குப் பகைவர் தோன்றியிருந்தமையை உணரா மலில்லை. எனவே, இவன் தன் முதற் புதல்வனும் பெரு வீரனுமாகிய இராசாதித்தன் என்பான் பெரும் படை யோடு திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரி லிருந்துகொண்டு சோழ இராச்சியத்தின் வடபகுதியைக் கண்காணித்து வருமாறு கி. பி. 936-ஆம் ஆண்டில் ஏற் பாடு செய்தான் 2. திருநாவலூர் என்பது தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருக்கோவலூர் தாலூகாவில் இந் நாளில் திருநாம நல்லூர் என்று வழங்கும் பேரூராகும். அவ்வூர், இராசாதித்தபுரம் என்றும் அங்குள்ள கோயில் இராசாதித்தேசுவரம் என்றும் அக்காலத்தில் வழங்கி வந்தன என்பதும் இராசாதித்தனுடைய படை வீரர்களும் பணிமக்களும் அக்கோயிலுக்குப் பல நிவந்தங்கள் அளித் துள்ளனர் என்பதும் அங்குக் காணப்படும் கல்வெட்டுக் களால் அறியக்கிடக்கின்றன 3. ஆகவே, அரசகுமாரனா 1. The Colas, இரண்டாம் பதிப்பு, பக்கம் 128. 2. S. I. I., Vol. VII, Nos. 954, 958 and 977; M E. R. for 1905-06. அந்நாளில் இராசாதித்தன்பால் பெரிய யானைப் படையும் குதிரைப் படையும் இருந்தன என்று தெரிகிறது. 3. S. I. I., Vol. VII, Nos. 954, 955, 956, 966, 973, 978 and 981, 989.)