பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பராந்தக சோழன் ஆட்சித் திறத்தையும் அரசியல் முறைகளையும் நன்கு விளக்குவனவாகும். இவ்வேந்தனுக்கு வேறு சில பெயர்களும் அந்நாளில் வழங்கியுள்ளன என்பது கல்வெட்டுக்களால் அறியப்படு கின்றது. அவை, வீரநாராயணன், வீரசோழன், பண்டித வற்சலன், குஞ்சரமல்லன், சங்கிராமராகவன், இருமடி சோழன் என்பன. அவற்றுள், வீரசோழன் என்ற பெயர் இவன் இராஷ்டிரகூட மன்னனாகிய கிருஷ்ணதேவனைப் போரில் வென்றமை பற்றி வழங்கியது என்று கன்னியா குமரிக் கல்வெட்டு உணர்த்துகின்றது 1. அஃது இவனது சோழசிங்கபுரக் கல்வெட்டில் கி. பி. 916-ஆம் ஆண்டிலேயே காணப்படுவதால் அச்செய்தியை நம்பமுடியவில்லை. ஒருகால் இராஷ்டிரகூட மன்னனாகிய இரண்டாம் கிருஷ்ணதேவனுக் கும் இவனுக்கும் போர் நிகழ்ந்து அதில் இவன் வெற்றி பெற்றிருக்கலாம். அவன், இவன் தந்தையாகிய ஆதித்த னுக்குப் பெண் கொடுத்த மாமன் என்பது முன் கூறப்பட்டது. எனவே, இருவர்க்கும் பகைமை எங்ஙனம் உண்டாயிற்று என்பது இப்போது புலப்படவில்லை. இவன் புலவர்களை அன்புடன் ஆதரித்து வந்தமையால் பண்டிதவற்சலன்? என்று புகழ்பெற்றனன்போலும் ; மற்போரில் வல்லவனாகவும் களிறுபோல் வலிமிக்கவனாகவும் விளங்கியமைபற்றிக் குஞ்சரமல்லன்' என்ற பெயர் 1. Travancore Archaeological Series, Vol. III, No. 34 Verse 58. 2. தஞ்சை ஜில்லாவில் ஐயன்பேட்டையைச் சேர்ந்த இராசகிரிக் கண்மையில் பண்டிதவற்சலச்சேரி என்ற ஊர் ஒன்று இவன் பெயரால் அமைக்கப்பெற்றிருந்தமை அறியத்தக்கது. (Ins. 264 of 1923) 3. திருவையாற்றுக்கு அண்மையில் கொள்ளிடத்தில் பிரிந்து திருப் புறம்பயம், திருவாப்பாடி, திருப்பனந்தாள் வழியாக ஓடும் மண்ணி யாற்றிற்றிற்குக் குஞ்சரமல்லன் என்ற பெயர் அந்நாளில் வழங்கிற்று.