பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

புகழேந்தி நளன் கதை



தமயந்திக்கு முதல் வேதனை; அதிலிருந்து தப்பியது அவள் மாபெரும் சாதனை.

சாலையைப் பார்த்து நடக்கவில்லை; என்றாலும் மெதுவாக இடித்துவிட்டுப் போகிற பேருந்துகள் உண்டு; இடித்தது யார் என்று கூடத் தெரியாது; விபத்துகள் என்று பேசும் காலம் இது.

இவள் குகைக் கோயிலைக் கண்டாள்; அது வெளிநாட்டினர் சுற்றி வரவும், கண்டு களிக்கவும்; அங்கே இருந்தது ஒரு மலைப்பாம்பு.

அது ஒரு யானையை விழுங்கிவிட்டு அளவுக்கு மீறி லஞ்சம் வாங்கி அகப்பட்டுத் திண்டாடுபவரைப்போல அதனை விழுங்க முடியாமல் வேதனைப்பட்டுக் கொண் டிருந்தது. பசித்து உண்ட உணவுதான் என்றாலும் பாறாங் கல்லை விழுங்கிவிட்டு அதனை உள்ளே தள்ள முடியாத நிலை.

இவளாக வந்து விழுவாள் என்று அது எதிர்பார்க்க வில்லை. பாதி உடம்பு உள் சென்றது; கொங்கைக்கு மேல் அம்மங்கை வெளியே தோன்ற அது விழுங்கியது; அது பெண் என்பதை அறிய முடிந்தது.

யாரிடம் முறையிடுவது? அவளுக்குப் பழக்க மானவன் நளன்தான். ஆதிமூலமே என்று அழைத்தது அன்று முதலை வாய்ப்பட்ட களிறு. திருமால் கையில் சக்கரம் கொண்டுவந்து காத்தான். முதலை மடிந்தது; யானை பிழைத்தது.

நளன் திருமால் அல்ல; இவள் குரல் அவனுக்குச் சென்று அடைய வாய்ப்பு இல்லை. அதைப் பற்றி அவள் சிந்திக்கவில்லை.

“அரவுக்கு இலக்காகி நிற்கின்றேன்; உன் தோள் வலியால் விலக்காயோ” என்று முறையிட்டாள். அவன்