பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75முருகு சுந்தரம்

கிறார் எலியட். ‘திருச் சபைக் கோவில் கொலை’ (Murder in the Cathedral) ‘குடும்பத்தின் மறுபிணைப்பு’ (The Family Reunion) என்பவை அவர் எழுதிய சிறந்த நாடகங்கள்.

எலியட் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் அதிகமாக விமர்சனம் செய்யப்பட்டவர்; வாழும் காலத்திலேயே பெரும் இலக்கிய மேதையாக மதித்து ஏற்றுக் கொள்ளப்பட்டவர்; இருபதாம் நூற்றாண்டின் ஆங்கிலக்கவிதை நடையை அடியோடு மாற்றி வைத்தவர். இவருடைய வாசகர் வட்டம் சிறிது. ஆனால் புகழ் வட்டம் பெரியது.