இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
75◯முருகு சுந்தரம்
கிறார் எலியட். ‘திருச் சபைக் கோவில் கொலை’ (Murder in the Cathedral) ‘குடும்பத்தின் மறுபிணைப்பு’ (The Family Reunion) என்பவை அவர் எழுதிய சிறந்த நாடகங்கள்.
எலியட் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் அதிகமாக விமர்சனம் செய்யப்பட்டவர்; வாழும் காலத்திலேயே பெரும் இலக்கிய மேதையாக மதித்து ஏற்றுக் கொள்ளப்பட்டவர்; இருபதாம் நூற்றாண்டின் ஆங்கிலக்கவிதை நடையை அடியோடு மாற்றி வைத்தவர். இவருடைய வாசகர் வட்டம் சிறிது. ஆனால் புகழ் வட்டம் பெரியது.