பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

25

காரணமாகிறது. இதையும் பெண்ணே பெண்ணுக்கு இழைக்கிறாள்.

பழைய காலங்களில் பெண்களின் உணர்வுகளுக்கு எந்த வடிகாலும் இல்லாமலே கல்வி - சமூக உணர்வும் முடக்கப்பட்டு அழுத்தப்பட்ட நிலையில் இது போன்ற பொறுப்பற்ற அவதூறு பேசுவது தவிர்க்கப்படாதபடி இருக்கலாம்.

ஆனால் இந்நாளிலோ

வாணிபரீதியாக இது மிகக் கேவலமான பரிமாணங்களைப் பெற்று, சினிமா நடிகைகளைப் பற்றிய தகவல்களாகப் பத்திரிகை பக்கங்களை நிரப்புகின்றன.

இந்தப் போக்கு ஆண்களிடம் இருந்தாலும், பெண்களே இந்த வகைச் செய்திகளை எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஆதரிக்கின்றனர்.

ஒரு பெண்ணின் நடத்தை ஒழுக்கம் பற்றி இன்னொரு பெண் விமரிசிக்கும்போது, தம்மினத்தின் மீதே சேற்றை வாரி இரைப்பதாக உணர வேண்டும்.

எந்தப் பெண்ணும் சமூகம் புறக்கணிக்கும் ஒழுக்கக் கேட்டைத் தானாக ஏற்கத் துணியமாட்டாள். அவள் தூண்டப்படுகிறாள்; தள்ளப்படுகிறாள்.

சமுதாயக் குற்றங்கள் பெரும்பாலும் பொருளாதார வறுமையிலும் மிதமிஞ்சிய செல்வ - அதிகாரக்குவிப்பின் ஆணவத்திலும்தான் நிகழ்கின்றன.

குறைந்தபட்சம் ஒர் ஆணைத் திட்டும்போதுகூட, அவன் தாயின் ஒழுக்கக் கேட்டைக் குறிக்கும் சொல்லால் குத்தி வாங்குகிறார்கள். இன்னார் மகனை - என்று தாயைத் தாக்குகிறார்கள்.