பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

95

என் முகத்தைப் பார்த்ததும் ஒரு செவிலி விரைந்து வந்தாள். அவள் கையில் நம் சிப்ளாக்கட்டை மாதிரி, ஒரு தாளக்கருவி, மென்மையாக ஒலிக்கக்கூடியது இருந்தது. இன்னொரு செவிலி மென்மையான குரலில் பாடிக் கொண்டிருந்தாள். ஏழெட்டுக் குழந்தைகள் மலம் கழிக்கும் பீங்கான்களில் அமர வைக்கப்பட்டிருந்தன. நான் தடையானேன். இரண்டொரு குழந்தைகள் புதிதாகக் குரலெழுப்பின.

நான் இந்த இடையூறுக்கு மன்னிப்புக் கோரி வெளி வந்தேன்.

இத்தகைய சிறார் பள்ளிகளை மறக்க முடியவில்லை. இப்போது அந்தக் கட்டமைப்பு துண்டுதுண்டுகளாகி விட்டது. பெண்கள், தாய்மார், குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாது. சாலைச் சந்திகளில் பிச்சையெடுக்கும் பிஞ்சுகளோ, காலணிகள் மெருகிடக் காத்திருக்கும் சிறாரோ தோன்றியிருக்கலாம்.

பல ஆண்டுகள் திட்டமிட்டு உருவாக்கிய அந்தக் குழந்தைகள் எத்தகைய எதிர்காலத்தைச் சாதித்து விட்டார்கள்; நம் நாட்டுக் குழந்தைகள் - இந்தியப் பிரஜைகள் எதைச் சாதிக்கவில்லை என்ற கேள்வி எழலாம். ஆனால் இங்கே உருவாகும் ஒர் ஒட்டு மந்தை அந்நாட்டில் உருவாவது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.

பாரதமணி
டிசம்பர், 2003