இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அவதானக் கலை 253
அமைந்த அபரிமிதமான ஆற்றலை வியந்து போற்றாமல் இருக்க முடியாது.
சதாவதானம் செய்குதம்பிப்பாவலர்.அவர்களிடம் எத்தனையோ மாணவர்கள் தமிழ் கற்றனர். இருந்தாலும் திரு. ஆறுமுகம் பிள்ளை ஒருவர் மட்டுமே தசாவதானி ஆக முடிந்தது என்பதே இதற்கு உதாரணம்.
இனியாவது மனவியலார், மூளை தொடர்பான ஆய்வாளர்கள், E.S.P எனப்படும் பொது உணர்வுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் பற்றி ஆய்கின்றவர்கள் ஆய பலரும் கூடி அவதானிகள் குறித்து ஆய்வார்கள் ஆயின் அது பெரும்பயனை அளிக்கும் என்பதில் ஐயம் இல்லை. -