இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
v
இக்கட்டுரைகள் அனைத்துமே அவற்றுள் பேசப்படும் பொருளை வாலாயமாகவும், மரபு பற்றியும் காணும் பார்வையை விடுத்து புதிய ஒரு கோணத்தில் பார்த்ததன் விளைவாகும்.
இந்த ஆசிரியனின் அரைநூற்றாண்டு வளர்ச்சியை எடுத்துக்காட்ட இந்நூல் பயன்படும் என்பதால் தமிழ் உலகம் இதனை வரவேற்கும் என நம்புகிறேன்.
வழக்கம்போல் சிறந்த முறையில் இதனை அச்சிட்டு வெளியிட்ட கங்கை புத்தக நிலையத்தார்க்கு என் நன்றி உரியதாகும்
அ. ச. ஞா.
சென்னை - 83.
மே - 1997