பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 59 'தம்பிக்கிட்ட கொடுத்திடலாம்... அவன் திருநெல் வேலியில இருந்து பஸ்ல வந்து நிலத்தைப் பார்த்துட்டுப் போவ வசதியா இருக்கும். நான் அதுக்குப் பதிலா பேச்சியம்மன் குளத்துல மூணு கோட்டை புஞ்சைய எடுத்துக்கிடுறேன்...' 'நீ ரொம்ப விட்டுக் கொடுக்க அண்ணாச்சி...புஞ்சை யும் நஞ்சையும் ஒண்ணாகுமா? அதோட அந்த நிலத்துக்கு அப்பாவுக்குத் தெரியாமலே அட்வான்ஸ் கொடுத்தது நீதான்...நான் மட்டும வச்சிக்கிட்டா நியாயம் இல்ல...' முன்ஸிப் கர்ணத்தைப் பார்த்து கண்ணடித்துப் பேசினார்: "பாத்தியராவே... அண்ணன் தமபின்னா இப்டில்லா இருக்கணும்... நீரு ஒம்ம தம்பிகிட்ட இப்டி நடந்திருந்தா இப்போ கோர்ட்டுக்கு அலைய வேண்டியது மிச்சமில்லா...' கர்ணம் தோற்றதற்கு அடையாளமாகக் கோபப் பட்டார். 'வே...நான் அப்புறம் கிளறுனே முன்னா, நீரு அசல் குப்பையா ஆயிடுவீரு...' கந்தசாமிக் கிழவர் மீண்டும் அவர்களை கையமர்த்த வில்லை. சரி...கடையம் வயல பாதிப் பாதியா பிரிச் சுடலாம். அண்ணன் தம்பிங்க எங்கயாவது ஒரு இடத்துல சந்திக்கணுமில்லியா...அப்புறம் வீட்டுக்கு வருவோமா...' என்று சொல்லிக்கொண்டே, கிராம முன்வnப்பையும் கர்ணத்தையும் அலட்சியப்படுத்தினார். இதற்குள் பள்ளி ஆசிரியை சரஸ்வதி காபி டம்ளர்கள் கொண்ட ஒரு தட்டோடு தோன்றினாள். வீட்டுக்குள்ளே இன்னொரு ஆசிரியை பார்வதி, அடுப்பிற்கு மேலிருந்த வாணலியில், கடலைமாவை, உருட்டி உருட்டிப் போட்டுக்கொண்டிருந் தாள். வாணலியில் இருந்து 'ஸ்.ஷ்...' என்று கிளம்பிய ஒசை இனிமேல் விவகாரமே இல்லை என்பது போலவும், இனிமேல்தான் இருக்கிறது என்பது போலவும் சொல்லா