பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 - புதிய தெய்வம் படாதி பதிதான் பட்டெனச் சொன்னார் : "இடிமேல் இடிதான்! அம்மா நீங்கள் இங்கே இருப்பதை எப்படியோ அவர்கள் சந்தேகம் இன்றித் தெரிந்து கொண்டனர்! பேங்குக் காரியைக் கொண்டுவா என்றால் நாங்கள் என்ன செய்வது? தவறினால் வெடியால் கோயிலே இடியும் முடிவைச் சொல்லுங்கள்..." என்றே இழுத்தார். கேட்ட பருவதம் கிடுகிடுத்துப் போனாள்! வாட்ட சாட்ட உடம்பு நடுங்க "எப்படி யேனும் என்னைக் கடத்தி அப்படி இப்படி பேரம் பேசி முப்பது நாற்பது இலட்சம் என்று