பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

வத்தில் எழுதுவதும் மரபானதே. ஒரே படைப்பில் பலவகை உருவங்களைப் புகுத்துவதும் புதிதல்ல. இணைக் குறள் ஆசிரியப்பா, வஞ்சி விருத்தம், வெண்டுறை, கட்ட8ளக் கலித்துறை என்னும் பல உருவங்களால் இயல்வது கலம்பகம். எனவே இதுவும் மரபானதே.

இக் கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும் பொழுது புதுக்கவிதை மரபானதே, யாப்புக்கு உட்பட்டதே. புதுக் கவிதை மரபானதே என்பதை ஒப்புக் கொள்ள விரும்பு வோரும் அது யாப்புக்கு உட்பட்டது என்பதை மறுக்கலாம். அதல்ை இக்கருத்துக்கு விளக்கம் தேவைப்படுகிறது" என்று கூறி செல்வம், அநேகம் புதுக்கவிதைகளை வகைப் படுத்தி உதாரணம் காட்டியுள்ளார்.

புதுக் கவிஞர்களுக்கு யாப்பே தெரியாது என்று கவிஞர்களும், கவிஞர்களுக்கு யாப்புதான் தெரியும்: என்று புதுக்கவிஞர்களும் செய்கின்ற கேலியின் அடிப் படை மேற்போக்கான பார்வைதான். தமிழ் மரபையும் யாப்பையும் இணைத்து நோக்கும் போது, கவிஞர்களின் பிடிவாத இயல்பும் புதுக் கவிஞர்களின் புரட்சி நோக்கமும் பொருள் பொதிந்தனவாகத் தோன்றுவதில்லை. ஏனென்ருல் தமிழ் மரபையும் யாப்பையும் இணைத்து நோக்கும் போது, பிடிவாதத்திற்கும் புரட்சிக்கும் தேவை இருப்பதாகவே தெரியவில்லை. இவ்விரண்டுக்கும் இடையில் சிக்கிக் கொள்வது தமிழ்க் கவிதை தான். பிடிவாதம் வறட்சியைத் தருகிறது. புரட்சி கட்டுக்கோப்பைத் தளர்த்துகிறது. இரண்டும் கவிதைக்கு இழப்பையே விளைவிக்கின்றன.”

இவ்வாறு கூறி, செல்வம் கவிதையின் உருவம், உள்ளடக்கம் சம்பந்தமான விளக்கங்களை எழுதியிருக் கிருர்,

கவிஞரின் படைப்புக்களில் பெரும்பாலானவை செய்யுள் அல்லது பாடலைச் சார்ந்தவை. புதுக் கவிஞர் கனின் படைப்புகளில் பல கவிதையைச் சார்ந்தவை. - ஒரு மொழியோ ஒரு காலமோ இலக்கியச் சிறப்பு மிக்கதாக ஆக வேண்டும் என்ருல் அந்த மொழியிலோ