பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுக்கவிதையின் உள்ளடக்கம்

57

படுகின்றன. அகவயவாதிகளைவிட, இவர்கள் ஆரோக்கியமானவர்கள். ஏனெனில் இவர்கள் சமுதாய விமர்சகர்கள். சுதந்திரம் பற்றிய சில கவிதைகளில் இப்போக்கைக் காணலாம்;

பூவரசு

நான் பேருக்குத்தான்
பூக்களிள் அரசு
இந்நாட்டு மன்னரான

உங்களைப் போல.
சுதந்திரம்

இரண்டடிக் கயிற்றால்
முளையுடன் கட்டப்பட்டுள்ள
மாடு கதறியது
மா......மா.......
எங்கிருந்தோ வந்த ஒருவன்
இரண்டடிக் கயிற்றை அவிழ்த்து
இருபதடிக் கயிற்றைக் கட்ட
மாடு இன்று துள்ளுகிறது

சுதந்திரம் அடைந்து விட்டதாய்.
இந்தியப் புதல்வர்கள்

ஜனநாயகப் பசுவிடம்
அரசியல் இடையர்கள்
ஆதாயப்பால் கறக்க
உதவும்...

நகரத்துக் கன்றுகள்.
சுதந்திரம்

நாங்கள் குருடர்கள்
பகல்......

எப்படியிருக்கும்?
எல்லோரும் எந்நாட்டு மன்னர்

நான்
இப்போது
நாடில்லாத ராஜா
ஒரு

ராணியில்லாத ராஜா.

7/5